Skip to main content

பிரசவித்த பெண்ணை கீழே தள்ளிய மருத்துவமனை ஊழியர்: கோபப்படும் பொதுமக்கள்..!!

Published on 23/04/2021 | Edited on 23/04/2021

 

The hospital employee who pushed down the delivered woman

 

“உங்களுக்கு காசுதான் முக்கியமா, மனித உயிர் முக்கியமில்லையா, எவ்வளவு லஞ்ச காசு கொடுத்தாலும் போதாதா?” என நாகை அரசு மருத்துவமனையில் பிரசவமான பெண்ணை அலட்சியமாக நடத்திய ஊழியரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகவள்ளி. இவரை, பிரசவத்திற்காக அவருடைய தந்தை கடந்த 19ஆம் தேதி நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அன்று மதியமே ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தச் சூழலில், கரோனா உள்ளிட்ட பல்வேறு டெஸ்ட்டுகளை எடுப்பதற்காக பிரசவமான முருகவள்ளியை கைவண்டியில் அமர வைத்து அழைத்துச் சென்றார் மருத்துவமனை ஊழியர் உமா.

 

The hospital employee who pushed down the delivered woman

 

வண்டியைத் தள்ளிக்கொண்டு போகிற போக்கில், “ஆண் குழந்தை பிறந்திருக்கு, பணம் கொடுக்க மாட்டீங்களா?” என கேட்டிருக்கிறார் அந்த ஊழியர். “பணம்தான் ஏற்கனவே கொடுத்தாச்சே” என பிரசவித்த பெண்ணின் தந்தை கூறியுள்ளார். உடனே அந்த ஊழியர் “அது மேல் அதிகாரிகளுக்கு, எங்களுக்கு வரவில்லை” என கூறியபடியே அலட்சியமாக வண்டியைத் தள்ளியுள்ளார்.

 

அப்போது பிரசவித்த அந்தப் பெண் கீழே விழும் அளவிற்கு வண்டியைத் தள்ளியிருக்கிறார். ஏற்கனவே படுக்கை வசதிகூட இல்லாமல், மிக கொடூரமான முறையில் முருகவள்ளி அவதிபட்டிருக்கிறார். இந்நிலையில், லஞ்சம் கொடுக்கவில்லை என்பதற்காக மருத்துவமனை ஊழியரே இரக்க மனமில்லாமல் பச்சிளம் தாயை கீழே தள்ளியது பலரையும் ஆத்திரம் அடைய செய்துள்ளது.

 

The hospital employee who pushed down the delivered woman

 

அந்தப் பெண்ணின் உறவினர்களும், சுற்றியிருந்த பொதுமக்களும் மருத்துவமனை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. “எவ்வளவு லஞ்ச காசு கொடுத்தாலும் போதாதா? அரசு மருத்துவமனைக்கு எதற்கு வருகிறோம்?” என்று ஆதங்கத்துடன் பெண்மணி கதறும் காட்சிகளைப் பார்த்த மனிதநேயம் கொண்ட அனைவரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.