Skip to main content

சில நாட்கள் ஓய்வெடுக்க முதல்வருக்கு மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை!

Published on 15/07/2022 | Edited on 15/07/2022
dmk

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக முதல்வர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ''இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்' எனத் தெரிவித்திருந்தார்.

 

வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வருக்கு நேற்று காவேரி மருத்துவமனையில் சிடிஸ் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல்வர் தொடர்ந்து உடல்நலம் தேறி வருகிறார். மேலும் சில நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்க காவேரி மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்