Skip to main content

புதையல் எடுப்பதாக நண்பனையே வெட்டி நரபலி.. கிருஷ்ணகிரியில் திகில் சம்பவம்

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

Horror incident in Krishnagiri

 

கிருஷ்ணகிரியில் புதையல் இருப்பதாக, நண்பனையே வெட்டி நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ளது புதூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் விவசாய தொழில் செய்து வந்த லட்சுமணனுக்கு நாகராஜ், சிவக்குமார் என்ற இரு மகன்களும் தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர். அவரது மனைவி நான்காண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள வெற்றிலை தோட்டத்தில் ஒன்றை அடி குழியில் விவசாயி லட்சுமணன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடலுக்கு முன் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், கோழி உள்ளிட்ட பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன.

 

இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தார் கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து வழக்குபதிவு செய்த போலீசார் மணி என்ற நபரை கைது செய்தனர் விசாரணை செய்ததில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு லட்சுமணன் மகளுக்கு பேய் பிடித்திருந்ததாகவும், அதை ஓட்டுவதற்காக சிரஞ்சீவி என்ற சாமியாரை கூட்டி வந்ததாகவும் நண்பன் மணி தெரிவித்துள்ளார். பூஜைகள் செய்துவிட்டு கிளம்பும்போது வெற்றிலை தோட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் புதையல் இருப்பதாகவும் நரபலி கொடுத்தால் அந்த புதையலை எடுத்து விடலாம் என்று சாமியார் சிரஞ்சீவி கூறிச் சென்றுள்ளார். இதில் ராணி என்ற பெண்ணை நரபலி கொடுக்க திட்டமிடப்பட்ட நிலையில் அவர் வராததால் புதையலை எடுத்தே ஆக வேண்டும் என்ற ஆசையில் மணி, நண்பன் லட்சுமணையே கொலை செய்து நரபலி கொடுத்தது அம்பலமானது. ஆனால் புதையல் கிடைக்காததால் அங்கிருந்து மணி தப்பி ஓடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எனக்கு பிடித்த சேனல்தான் வைக்க வேண்டும்’ - சிறை வார்டன்களுக்கு ரவுடி கொலை மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 rowdy smashed CCTV cameras in Cuddalore Central Jail

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை  கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பிரபல ரவுடி  எண்ணூர் தனசேகரன் இந்த சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக உதவி ஜெயிலரை, அவரது வீட்டில் சிறைக் காவலர் உதவியுடன், ரவுடி  எண்ணூர் தனசேகரன் பெட்ரோல் குண்டு வீசி  எரிக்க முயற்சி செய்தார். 

இவர் மீது இது குறித்து கடலூர் முத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி எண்ணூர் தனசேகரன் பலமுறை சிறை அதிகாரிகளை கண்டித்து போராட்டங்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரவு கைதிகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது  ரவுடி எண்ணூர் தனசேகரன் தனக்கு பிடித்த சேனலை வைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் திடீரென்று சிறை வளாகத்தில் இருந்த சிசிடிவி. கேமராக்களை உடைத்துள்ளார். இது குறித்து கடலூர் முத்துநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள்  புகார் அளித்தனர். அதில் எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி. கேமராக்களை உடைத்ததாகவும், சிறை வார்டன்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இதனை கண்டித்து பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Next Story

சந்தேகத்தின் பேரில் ஓட ஓட விரட்டி ஒருவர் வெட்டிக் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Suspect chased away a person  incident

அரியலூர் மாவட்டம் குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(45). இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். விவசாயியான மனோகரன் விவசாய பணிகளுக்காக டிராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின் போன்றவற்றை விலைக்கு வாங்கி வைத்துள்ளார். தனது சொந்த வேலைகள் போக அப்பகுதியில் உள்ள கிராம விவசாயிகளுக்கும் தனது ட்ராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின்களை வாடகைக்கு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது விவசாய ட்ராக்டரை ஓட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை பணிக்கு அமர்த்தியுள்ளார். ரமேஷ்க்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார் மனோகரன். ரமேஷும் வீட்டில் இருந்தபடியே மனோகரனுக்கு உதவியாக அவரது விவசாய வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், தனது வீட்டில் தங்கியிருக்கும் ரமேஷுக்கும், தனது மனைவி புஷ்பவள்ளிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். நாளடைவில் மனோகரனுக்கு இருக்கும் சந்தேகம் அதிகமான நிலையில் நேற்று விவசாய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கையில் அரிவாளுடன் காத்திருந்த மனோகரன் ரமேஷை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரிவாளுடன் வெங்கனூர் காவல் நிலையத்தில் மனோகரன் சரணடைந்துள்ளார். இதனிடையே ரமேஷின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.