Skip to main content

நடுக்கடலில் மீனவர்களுக்குள் நடந்த கொடூர மோதல்

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

தடை செய்யப்பட்ட சுருமடிவலை விவகாரத்தால் இரண்டு கிராம மீனவர்கள் நடுக்கடலில், கற்கள் பாட்டில்களை வீசி தாக்கிக்கொண்டதும், படகுகளைக்கொண்டு மோதிக்கொண்ட விவகாரம் கடலோர மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. 11 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

 

 The horrific conflict between fishermen in the Sea

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதியில்  பல மீனவ கிராமத்தினர் மீன்பிடி தொழிலை செய்துவருகின்றனர்.  அதில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி நாகப்பட்டினம் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மீன்பிடித்துள்ளனர், இதனை அறிந்த  வெள்ளப்பள்ளம் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மென்று பைபர் படகில் சென்று, அரசு தடை செய்யப்பட்ட சுருமடிவலைகளை பயன்படுத்தி நீங்க மீன்பிடிப்பதால், கடலில் மீன்வளம் குறையாதா, கடலை நம்பியிருக்கிற பல ஆயிறக்கணக்கான மீனவர்களின் வாழ்வாராரம் என்னவாகும் என பேசிக்கொண்டிருக்கும்போதே, கைலப்பாகி இருதரப்பும் நடுக்கடலிலேயே அடித்துக்கொண்டனர்.

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கீச்சான்குப்பம் மீனவர்களின் விசைப்படகுகளில் தயாராக வைத்திருந்த பாட்டில், கருங்கற்கலைக்கொண்டு வீசி தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் வெள்ளபள்ளம் மீனவர்கள் 6 பேருக்கும், கீச்சாங்குப்பம் மீனவர் 11 பேரும் என 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இரு மீனவ கிராமங்கள் மட்டுமின்றி, கடலோரமுள்ள அனைத்து மீனவகிராமங்களுக்கும் தெரியவர பதற்றம் அதிகமாகிவிட்டது.  தாக்குதலை கண்டித்து வேதாரண்யம் பகுதியில் உள்ள வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, புஷ்பவனம், உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

 

 The horrific conflict between fishermen in the Sea


அதோடு பதினோரு கிராமத்தின் சார்பில், நடுக்கடலில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து மீனவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி மற்றும் அதிவேக எஞ்சின் கொண்ட படகுகளையும் தடை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகள் கொண்ட மனுவை ஆட்சியரிடம் கொடுத்துள்ளனர்.

இவ்வளவு சம்பவம் நடந்த பிறகும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இனி நாங்களே அத்துமீறி கடலில் இறங்கி தடைசெய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன் பிடிக்கும் மீனவர்களை நடுக்கடலில் வைத்து மீண்டும் சிறை பிடிப்போம்," என்கிறார்கள் கோபமாக.

நாகை கடலோர காவல்துறையினரிடம் கேட்டோம்,"கீச்சாங்குப்பம் மீனவர்கள் 14 பேர் மீதும் வெள்ளப்பள்ளம் மீனவர்கள் 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளோம்."எற்கிறார்கள். "அரசு தடைசெய்யப்பட்ட வலைகளை, மீன்வளத்துறை அதிகாரிகளே அனுமதிப்பதால் வந்த மோதல்தான் இது. நாகை மாவட்டத்தில் பல கிராமங்களில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திவருகின்றனர். இது அனைத்துமே அதிகாரிகளுக்கு தெரியும், அவர்கள்தான் இதற்கு பொறுப்பேற்கனும்," என்கிறார் அக்கரைப்பேட்டை மீனவர் ஒருவர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.