Skip to main content

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு கலைக் கல்லூரி  கௌரவ விரிவுரையாளர்கள்!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

Honorary Lecturers of Government Arts College engaged in struggle

 

திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் அனைவருக்கும் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சம்பளம், 2019 ஆண்டிற்கான கரோனா கால சம்பளம், 14 மாதத்திற்கான அரியர் சம்பளம் ஆகிய சம்பளங்கள் வழங்கப்படவில்லை. இதனால் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 6 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலை நீடிக்கிறது.

 

அதனால் பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து இன்று (17.12.2021) காலை 11 மணி அளவில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அனைத்துத்துறை கௌரவ விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர். மேலும், இதுபோன்று திருவெண்ணைநல்லூர், தென்னாங்கூர், அரக்கோணம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். தங்களின் கோரிக்கைகளுக்குப் பல்கலைக்கழக நிர்வாகமும் தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறையும் செவிசாய்க்குமா? என்ற எதிர்பார்ப்பில் கௌரவ விரிவுரையாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயை கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த மகன்; போலீசார் விசாரணையில் திடுக் வாக்குமூலம்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

 Shocking confession in police investigation;thittakudi incident

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கிராமம் ஒன்றில் பெற்ற மகனே தாயை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கொலைக்கான காரணம் குறித்து மகன் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ளது தொளார் கிராமம். இங்கு தாயுடன் வசித்து வந்தவர் சேவாக். இவர் தனது தயார் கஸ்தூரியுடன் வசித்து வந்தார். திடீரென கஸ்தூரி காணாமல் போன நிலையில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு புகார் கொடுத்தனர். சேவாக்கின் வீட்டிற்கு சென்ற போலீசார் ஆய்வு செய்ததில் வீட்டுக்குள்ளேயே சடலம் புதைக்கப்பட்டது தெரியவந்தது. தோண்டி பார்த்தபோது அது கஸ்தூரியின் உடல் என்பது தெரியவந்தது. கஸ்தூரி வைத்திருந்த செல்போனை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் செல்போனை சேவாக் வைத்திருந்தது. தெரியவந்தது. இதனால் இந்த கொலையை சேவாக் செய்திருக்கலாம் என்று கோணத்தில் தலைமறைவாக இருந்த சேவாக்கை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். காதல் எதிர்ப்பால் தாய் திட்டியதால் கொலை செய்து வீட்டுக்குள்ளே புதைத்த அந்த அதிர்ச்சி தகவலை சேவாக் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.

 

 Shocking confession in police investigation;thittakudi incident

 

சேவாக்  பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கோவையில் தங்கியுள்ள அப்பெண்ணை அடிக்கடி இவர் சென்று பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேவாக்கின் தாய் கஸ்தூரி இந்த காதலை எதிர்த்துள்ளார். மேலும் மகனை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சேவாக், தாய் கஸ்தூரியை வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் தாயின் உடலை குடிசை வீட்டுக்குள்ளேயே வைத்து புதைத்து மேலே மண் போட்டு பூசியுள்ளார். அதன் பிறகு தாய்மாமாவின் வீட்டிற்கு சென்று தலைமறைவானது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

Next Story

மாணவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட கல்லூரி விரிவுரையாளர்!

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

college lecturer who falls in love with student and married her

 

நாமக்கல்லில் கல்லூரி மாணவனை அதே கல்லூரியில் பணியாற்றிய விரிவுரையாளர் திருமணம் செய்துள்ளார். 

 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மீனா என்ற பெண் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் அதே கல்லூரியில் இளங்கலைப் படித்து வந்த மாணவர் பிரவீன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரின் காதலை அறிந்ததும் கல்லூரி நிர்வாகம் இருவரது பெற்றோர்களையும் நேரில் அழைத்து இருவரையும் கண்டித்துள்ளனர். ஆனால் இதனை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

 

இந்த நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி மீனா - பிரவீன் ஜோடி வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனையடுத்து போலீசார் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் விரிவுரையாளர் மீனாவை மாணவர் பிரவீனுடன் அனுப்பி வைத்தனர்.