Skip to main content

உயிரை பறித்த ஓரினச்சேர்க்கை..! காட்டிக் கொடுத்த துண்டுச்சீட்டு..!

Published on 14/08/2018 | Edited on 14/08/2018
burns-france-tourist-man


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் ஒலையக்குன்னம் கிராமத்தைச் சேர்ந்த அழகிரி என்ற விவசாயி தனது வயலில் கிடந்த ஒரு பேக்கை எடுத்துப் பார்த்த போது அதில் ஒரு பாஸ்போர்ட் மற்றும் சில பொருட்கள் இருப்பதை பார்த்து அதை மதுக்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் செய்த ஆய்வில் அந்த பாஸ்போர்ட் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பியாரே பெர்னாட்ராபர்ட்ரெனே என்ற பீட்டர் (68) என்பது தெரிய வந்தது. மேலும் அதே பேக்கில் வயாக்கரா போன்ற மாத்திரைகளும் இருந்தது. மேலும் ஒரு துண்டு சீட்டில் திருமுருகன் ஆவிக்கோட்டை என்ற பெயரும் எழுதப்பட்டிருந்தது. அந்த துண்டுச் சீட்டில் இருந்த திருமுருகனை மதுக்கூர் போலீசார் பிடித்து விசாரனை செய்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேரந்த பீட்டர்க்கும் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஆவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த திருமுருகன் (29) என்பவருக்கும் கடந்த 5 வருடத்திற்கு முன்பு பழக்கம் இருந்துள்ளது. திருமுருகன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் படித்துக் கொண்டிருக்கும் போது மகாபலிபுரத்துக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீட்டருக்கும், திருமுருகனுக்கும் பீச்சில் முதல் முறையாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் கடந்த 5 ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது.

முதல் பழக்கத்திலிருந்து இவர்களுக்குள்ளும் ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி பீட்டர் திருச்சிக்கு வந்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 5ம் தேதி திருமுருகனுக்கு பீட்டர் போன் செய்து உங்கள் ஊரை சுற்றிப் பார்க்க வரவேண்டும் எனக் கூறியுள்ளார். அதன்பேரில் திருச்சிக்கு வந்த திருமுருகன் ஒரு காரில் பீட்டரை அழைத்துக் கொண்டு மன்னார்குடிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு ஆவிக்கோட்டையில் உள்ள திருமுருகன் வீட்டிற்கு வந்துள்ளனர். தொடர்ந்து வீட்டில் இருவரும் மது அருந்தினர்.

பின்னர் இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பீட்டருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது திருமுருகன் பீட்டரை கீழே தள்ளியதால் பீட்டர் மயங்கிய நிலைக்கு சென்று அங்கேயே இறந்துவிட்டார். உடனே திருமுருகன் தடயங்களை அழிக்க நினைத்து சமையலறையில் பீட்டரின் உடலை பெட்ரோல், டீசலை ஊற்றி, பழைய டயர்களை போட்டு எரித்து விட்டார். பின்னர் எரிந்து முடிந்ததும் எலும்பு, சாம்பல், உள்பட்டவற்றை 3 மூட்டைகளில் கட்டி மதுக்கூர் அருகே உள்ள வாட்டாகுடி உக்கடை வாய்க்காலில் வீசி எரிந்துவிட்டார். மேலும் பீட்டரின் பையை ஒலையகுன்னம் கிராமத்தில் ஒரு வயலில் வீசியுள்ளார்.

துண்டுச் சீட்டின் அடிப்படையில் போலீசார் திருமுருகனை பிடித்து விசாரிக்கும் போது மேற்கண்ட அனைத்து தகவல்களையும் திருமுருகன் போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் திருமுருகனை கைது செய்து அவரது காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் பீட்டரின் பையிலிருந்து வயாகரா மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் இந்த கொலை சம்மந்தமாக வேறு எதுவும் பின்புலங்கள் உள்ளதா எனவும் விசாரிக்க பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செங்கமலக்கண்ணன் தலைமையிலான போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. அழகர்சாமி, தாசில்தார் சாந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் உடல் வீசப்பட்ட வாய்க்கால் பகுதியிலிருந்து 3 மூட்டைகளும் எடுக்கப்பட்டு அவையனைத்தும் ஆய்விற்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டு பீட்டரின் உயிர் ஓரினச்சேர்க்கையால் பறிபோனது. ஆனால் ஒரு துண்டுச் சீட்டு காட்டிக் கொடுத்துவிட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

தன்பாலின சேர்க்கைக்காக சென்ற இளைஞருக்கு நேர்ந்த துயரம்; ஆப்பு வைத்த செல்போன் ஆப்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
NN

கோவையில் தன்பாலின சேர்க்கைக்காக கல்லூரி இளைஞரை அழைத்த கும்பல் அவரைத் தாக்கி செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர் பிரபலமான மொபைல் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், அதில் அடையாளம் தெரியாத சில நபர்களுடன் பழகி வந்துள்ளார். அந்த மொபைல் செயலியில் இருந்து அடையாளம் தெரியாத நபர், தன் பாலின சேர்க்கைக்கு இளைஞரை அழைத்துள்ளார். இதனை நம்பி சென்ற அந்த கல்லூரி இளைஞரை தாக்கிய ஒரு கும்பல், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 11 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கப்பட்டது. கும்பலால் தாக்கப்பட்டு பின்புற தலையில் காயமடைந்த கல்லூரி மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் செயலி மூலம் அறிமுகமாகும், முன்பின் தெரியாதவர்களை நம்பி இதுபோல் வெளியே செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Next Story

ஓரின சேர்க்கையாளர்களுக்கு குழந்தை பிறக்கும் – புதிய ஆராய்ச்சியில் நம்பிக்கை!

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
mice


ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் இணைந்து வாழ சட்டம் அனுமதி அளித்துவிட்டது. ஆனால், அவர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்தது. ஆனால், இப்போது, அவர்களுடைய தண்டுவட அணுவை வைத்து குழந்தையை குளோனிங் மூலம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை விஞ்ஞானிகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
 

ஜப்பான் விஞ்ஞானிகள் எலிகளில் நடத்திய இந்த குளோனிங் ஆய்வு வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளனர். ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதிகளின் தண்டுவட அணுவை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் எலிக்குட்டிகள் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தனர். பெண் பாலின தம்பதியின் அணுக்கள் மூலம் உருவான குட்டிகள் ஆரோக்கியமாகவும், ஆண் பாலினத் தம்பதியின் அணுக்கள் மூலம் ஆரோக்கியம் குறைந்த குட்டிகள் உருவானதாகவும் விஞ்ஞானிகள் கூறினர்.
 

ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணுக்குள்ளும் அவர்களுடைய அப்பா மற்றும் அம்மாவின் மரபணுக்கள் இருக்கும். அவற்றை பயன்படுத்தியே இந்த குளோனிங் குட்டிகள் உருவாக்கப்பட்டன. ஒரு சில ஆண்கள் மற்றும் பெண்களிடம் தந்தை அல்லது தாயின் அணுக்கள் மட்டுமே இருக்கும் அவர்களி அணுக்களை பயன்படுத்தி குளோனிங் செய்வது இயலாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதற்கு பதிலாக கரு முட்டைகளில் உள்ள அணுக்களைப் பயன்படுத்தியோ, விந்தணுக்களை பயன்படுத்தியோ மட்டுமே குளோனிங் முறையில் உற்பத்தி செய்ய முடியும்.
 

விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு ஆண், பெண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகிறார்கள்.