கரோனா வைரஸ் பரவலைத்தடுப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நான்கு நர்சிங் கல்லூரி மாணவ – மாணவிகளின் உதவியைக் கேட்டு வாங்கியுள்ளது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம். திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு தனியார் செவிலியர் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 4 ஆம் ஆண்டு படித்துவரும் மாணவ – மாணவிகளிடம், கரோனா வைரஸ் பரவலைத்தடுப்பதற்காக ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களை பரிசோதனை செய்ய உதவ வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சார்பில் கேட்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2020-04-04 at 16.31.04 (1).jpeg)
இதில் மனமுவந்து இந்த சேவை பணிக்காக 69 மாணவ – மாணவிகள் வருகை தந்துள்ளனர். இவர்கர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களுக்கும் முதல் கட்டமாக, குழு குழுவாக பிரித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான பேருந்து வசதி, உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தந்து இவர்களோடு மருத்துவர்களும் செல்வார்கள்.
இவர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று பொதுமக்களின் உடலை பரிசோதனை செய்துக்கொண்டு வருவார்கள். இந்த 4 ஒன்றியங்கள் முடிந்ததும் மீதியுள்ள மற்ற ஒன்றியங்களுக்கு செல்வார்கள் என்றும், மாவட்டத்தில் உள்ள ஏறக்குறைய27 லட்சம்பொதுமக்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளோம் என ஏப்ரல் 4ந்தேதி தெரிவித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2020-04-04 at 16.31.03_0.jpeg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
சில தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிக்க முடிவு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளும் கரோனா சிறப்பு வார்டாக மாற்றும் பணிகளும்நடைபெற்று வருகின்றன என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)