Skip to main content

வீட்டிலிருந்தே பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கலாம்!

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகள் இணைய தள மிண்ணணு சேவைக்கு மாறியுள்ளனர். மேலும் டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய பங்கை வகிப்பது "National Informatics Centre" நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் அரசுக்கு தேவையான இணையதள பக்கங்களை உருவாக்கித் தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் இணைய தளம் மூலமாக பொதுமக்கள் மனு அளிக்கும் வகையில் இதற்கென இணைய தள பக்கங்களை உருவாக்கியுள்ளது " National Informatics Centre". இந்நிறுவனம் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.இந்த இணைய தள பக்கத்தின் முகவரி : gdp.tn.gov.in ஆகும்.  இதில் பொதுமக்கள் , ஓய்வூதியதாரர்கள், விவசாயிகள் என அனைவரும் தங்கள் வீட்டிலிருந்தவாரே இணையதளம் மூலமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அளிக்கலாம்.

online petition

மனுதாரர் இந்த இணையதள பக்கத்திற்கு சென்று முதலில் தங்கள் தொலைபேசி  எண்ணை மனுதாரர் பதிவிட வேண்டும்.பின்பு அந்த தொலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் வரும். இதில் ரகசிய குறியீட்டு எண்கள் இடம் பெற்றிருக்கும். இந்த எண்ணை பதிவிட்டால் மட்டுமே உள்ளே (Login) நுழைய முடியும். பின்பு தங்கள் பெயர் , முகவரி , மாவட்டம் , எந்த துறை சமந்தமாக மனு செய்ய உள்ளோம் என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு மனுதாரர் மனு தொடர்பான முழு விபரங்களை தமிழ் ( அல்லது ) ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும். தாங்கள் அளிக்கும் மனு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் இந்த மனுவோடு பதிவேற்றம் செய்யலாம். இதன் பிறகு "SUBMIT" என்ற Option - யை கிளிக் செய்ய வேண்டும். பின்பு பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வரும். இதில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்ததற்கான "Acknowledgement No" இடம்பெற்றிருக்கும்.இந்த எண்ணை பயன்படுத்தி மனுதாரர் தான் அளித்த மனுவின் தற்போதைய நிலையை அறிலாம்.

online petition status

 மனுவின் நிலையை அறிய இரண்டு வழிமுறைகள் உள்ளன். இதில் ஒன்று குறுந்தகவல் மூலம் "Acknowledgement No" யை டைப் செய்து "155250" என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இந்த சேவை முற்றிலும் இலவசமாகும். இதன் பிறகு மனுவின் நிலை பற்றி குறுந்தகவல் வரும்  (அல்லது) gdp.tn.gov.in என்ற இணைய தளப்பக்கத்திற்கு சென்று  "Petition Status" என்ற Option இடம்பெற்றிருக்கும். இதில் மனுதாரரிடம் உள்ள "Acknowledgement No" பதிவிட்டு "Submit" செய்ய வேண்டும். பின்பு மனுவின் நிலையை அறியலாம் மற்றும் பதிவிறக்கம் செய்யும் வசதியும் உண்டு. இந்த இணைய தள சேவை என்பது முதியோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். எனவே படித்த இளைஞர்கள் இந்த சேவையை  பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்கள் மற்றும் முதியோர்களுக்கு இணையதள சேவையை பயன்படுத்தி மனு அளித்து உதவிட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

பி . சந்தோஷ் , சேலம் 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.