Skip to main content

கோவிலுக்கு சென்ற நேரத்தில் வீட்டில் கொள்ளை! -போலீசார் விசாரணை!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

 Home robbery on the way to the temple! -Police investigation!

                                                                            கோப்புக்காட்சி 

திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற மீனாட்சி, விருதுநகரிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பியபோது, அதிர்ச்சி காத்திருந்தது. 

 

அப்படியென்ன நடந்தது?

 

விருதுநகர் மாடர்ன் நகரைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவருடைய கணவர் மனோகரன், கனடாவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். மீனாட்சி தனது வீட்டைப் பூட்டிவிட்டு, உறவினர்கள் லதா மற்றும் சரஸ்வதி ஆகியோரோடு, 10-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கெல்லாம் திருச்செந்தூர் சென்றார். அங்கு முருகனைத் தரிசித்துவிட்டு, அன்றிரவே விருதுநகர் திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்கப் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியானார்.  உடனே, விருதுநகர் – சூலக்கரை காவல்நிலையத்தில் அவர் புகாரளிக்க, சம்பவ இடத்துக்கு வந்து சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

 

காவல்துறையின் விசாரணையில், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 30 சவரன் நகை மற்றும் ரூ.44000 ரொக்கம் கொள்ளை போனது தெரிந்தது. வழக்கு பதிவு செய்த சூலக்கரை காவல் நிலைய போலீசார், கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.