Skip to main content

புனித ஹஜ் பயணம் பெயரில் மோசடி !

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

இஸ்லாமியார்கள் தங்களுடைய வாழ்நாள் கனவாக வைத்திருப்பது புனித ஹஜ் பயணம். இந்த புனித பயணத்தை வாழ்க்கையில் ஒருமுறையேனும் சென்று விட வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக செய்வார். அப்படி சேர்த்து வைத்திருந்த பணத்தையும் ஹஜ் பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று மோசடி செய்த சம்பவம் திருச்சியில் நடந்து உள்ளது.

 



திருச்சி உறையூர் கீரை கொல்லை பகுதியை சார்ந்தவர் அகமது பசீர் இவர் இஸ்லாமியர்களின் புனித பயணம் ஹஜ் பயணத்தை செல்ல முடிவு செய்தார்.

 

police


அதற்காக மேலும் தன்னுடன் 3 பேரை சேர்த்துக் கொண்டு டிராவல்ஸ் ஏஜென்சியிடம் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்தார். திருச்சி பீமநகர் பங்காளி தெருவில் டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் முகமது அனிபாவை சந்தித்துப் பேசினார். அவரும் அதற்காக அழைத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவதாக உறுதியளித்தார். இதற்காக கட்டணமாக அகமது பசீர் மற்றும் அவருடைய நண்பர்களிடம் மூன்று பேரும் சேர்ந்து 10 லட்சத்து 60 ஆயிரத்து ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்வதற்காக கொடுத்தனர்.

 



ஆனால் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான எந்தவித ஏற்பாடுகளில் செய்யாமல் டிராவல்ஸ் உரிமையாளர்கள் காலதாமதம் செய்துள்ளனர். குறிப்பிட்ட தேதியை தாண்டியும் இதற்கான ஏற்பாடுகள் செய்யாதால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தங்கள் பணத்தை திரும்ப கேட்டு கேட்டுள்ளனர் ஆனால் அவர் சரியான பதில் அளிக்கவில்லை முகமது அனிபா தங்களிடம் 10 லட்சத்து 60 ஆயிரத்து முதல் மோசடி செய்து விட்டதை அறிந்த அவர்கள் இன்னும் பேரதிர்ச்சி அதிர்ச்சி அடைந்தனர்.

 



இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் அகமது பசீர் சார்பில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம் கிளை திருச்சி மாநகர போலீஸ் துணை ஆணையர் நிஷாவுக்கு முகமது ஹனிபா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை கோரி உத்தரவிட்டது அதன்பேரில் முகமது அனிபா மீது 10 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்து தொடர்பாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.