Skip to main content

சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையேற்றதால் வேதனை அடையும் ஹாலோ பிளாக் நிறுவனங்கள்!!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021
Hollow block companies suffer due to rising prices of construction materials including cement

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும் சிமெண்ட்டால் ஆன கற்கள் ஜன்னல்கள், ஜாடிகள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன.  தற்போது கரோனா தொற்று பேரிடர் காலத்தினால் வேலை செய்ய முடியாமல், வருமானம் ஈட்ட முடியாமல் தவித்துவந்த உற்பத்தியாளர்களுக்கும் அவர்களைச் சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் பேரதிர்வாக கட்டுமான மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் செய்வதறியாமல் திகைத்திருக்கின்றனர்.

 

ஹாலோ பிளாக் உற்பத்திக்குத் தேவைப்படும் முக்கிய மூலப் பொருட்களில் ஒன்றான சிமெண்ட், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு  இருந்த விலையைவிட 80 ரூபாய் அதிகரித்து 460 ஆகவும், 6 ஆயிரத்திற்கு விற்ற 100 கிலோ கம்பி 7 ஆயிரம் ஆகவும், 8,500க்கு விற்ற 3 யூனிட் ஜல்லி 9,500 ஆகவும் விலை உயர்ந்துள்ளதால் சிறு, குறு தொழிலாக செய்துவந்த ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இத்தொழிலைக் கைவிட்டுவிட்டதாக தெரிவிக்கின்றனர். மேலும், சில உற்பத்தியாளர்களின் கடன் சுமை, குடும்பத்தின் நிலைமை, இத்தொழிலை சார்ந்து வாழும் தொழிலாளர்களது குடும்பத்தின் நலனைக் கருதி, கடந்த ஒருமாத காலமாக பல்வேறு பண நெருக்கடியில் சிமெண்ட் பொருட்களைத் தயாரித்துவந்தாலும், மூலப்பொருட்களின் விலையேற்றத்தை சரிக்கட்டும் நோக்கத்தில், தயாரிக்கப்படும் சிமெண்ட் கற்களை மூன்று முதல் நான்கு ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு அப்பொருளை வாங்க வரும் ஏழை-எளிய மக்களான கிராமப்புற வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்ய முற்படும்போது, விலையேற்றம் குறித்து தெரிவித்தாலும், அப்பொருட்களை விற்பதற்குள் கடும் வாக்குவாதம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

 

அவர்களிடம் கட்டுமான மூலப்பொருட்களின் விலையேற்றத்தைப் பற்றி எடுத்துரைத்து விற்பனை செய்து வருவதுடன் வேதனையும் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த ஒருமாத காலத்தில் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தால், வீடுகள் கட்ட வேண்டுமென்று நினைக்கும், கிராமப்புற ஏழை, எளிய மக்களின் கனவு நனவாகாமல்தான் போகும். பண்டைய காலங்களில் முன்னோர்கள் பயன்படுத்திய களிமண்ணால் ஆன வீடுகள், புளிக்கரைசலைப் பயன்படுத்தி மூங்கில் தட்டில் அமைத்த சுவர்களை எழுப்பி வாழலாம் என்று பொதுமக்களின் மனநிலை மாறக்கூடும் என்று தெரிவிக்கின்றனர். தங்கம் விலைபோல் உயர்ந்துவரும் கட்டுமானப் விளைபொருட்களின் விலையேற்றத்தை தமிழ்நாடு அரசு சரி செய்யுமா? செய்யாதா? என பல்வேறு கேள்விகளுடன் சிமெண்ட் கற்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் புதிதாக வீடு கட்டுபவர்கள் என பல்வேறு தரப்பினர் மன வேதனை அடைவதாக தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.