Skip to main content

கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Published on 03/11/2018 | Edited on 03/11/2018
 Holidays to Thoothukudi schools due to heavy rains

 

கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

 

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் மழைபெய்து வருகிறது.

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சூரக்குடி, கோட்டையூர், பள்ளத்தூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் மதுரை மாவட்டத்தில் மதுரை அண்ணா நகர், மாட்டுத்தாவணி, கே.கே நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், அரசடி ஆகிய பகுதிகளில் மழை பெய்துவருகிறது.

 

கன்னியாகுமரியில் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குலைச்சல் ஆகிய இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

சார்ந்த செய்திகள்