Holidays for schools today in 23 districts!

கனமழை காரணமாக, தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் இன்று (27/11/2021) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (27.11.2021) விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து, அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment