திண்டுக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின்பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (16.10.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பிறப்பித்துள்ளார்.