Skip to main content

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6,000 கன அடியாக அதிகரிப்பு!

Published on 31/05/2020 | Edited on 01/06/2020

 

Hogenakkal


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
 


தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர் வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. 


கடந்த 20ஆம் தேதி முதல் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், திடீரென்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நேற்று (மே 30) நீர் வரத்து 1,500 கன அடியாகச் சரிந்தது. பின்னர் நேற்று இரவு முதல் கர்நாடகாவில் மழைப்பொழிவு வலுத்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் முதன்மை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 
 


ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று வினாடிக்கு 2,250 கன அடியாக இருந்த நீர் வரத்து, ஞாயிற்றுக்கிழமை (மே 31) காலையில் 2,389 கன அடியாக வரத்து உயர்ந்துள்ளது. அதேநேரம், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 65.96 டி.எம்.சி. ஆக உள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.