ADVERTISEMENT

சிவகாசி அரசு மருத்துவமனையில் தொடர் விசாரணை! -அதிகாரிகள் படையெடுப்பால் நோயாளிகள் கலக்கம்!

12:47 PM Dec 28, 2018 | cnramki

ADVERTISEMENT

சாத்தூரில் 8 மாத கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், ஐவர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவினர் இன்று சிவகாசி அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். மருத்துவ மற்றும் ஊர்க சுகாதார சேவைகளின் கூடுதல் இயக்குநர் மாதவி தலைமையிலான இக்குழுவினர், சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ரத்தவங்கி மருத்துவர், ரத்த வங்கி ஊழியர்கள், சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர் களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரத்த பரிசோதனை குறித்து ஆய்வு நடத்துவதற்கு, மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

ADVERTISEMENT


சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு மாறி மாறி மருத்துவத்துறை அதிகாரிகள் படையெடுத்து வருவதைப் பார்க்கின்ற நோயாளிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT