உதகையில் சாவர்க்கர் பிறந்த நாளைஆளுநர் ஆர்.என்.ரவி கொண்டாடியுள்ளார்.
உதகையில் நடைபெறும் துணைவேந்தர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று அங்குள்ளராஜ்பவனில் சாவர்க்கர் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
சாவர்க்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 'சாவர்க்கர் ஒரு உறுதியான சுதந்திரப் போராட்ட வீரர். அவரது தியாகங்கள் இந்தியர்களை ஊக்குவிக்கும். ஆங்கிலேயர்களால் உடலாலும் மனதாலும் கொடூரமான சித்திரவதைகளைஅனுபவித்தவர். சாவர்க்கர் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய தொலைநோக்கு பார்வை கொண்டவர்' என புகழாரமும் சூட்டியுள்ளார்.