ADVERTISEMENT

''அவரின் ஒப்புதல் தேவையில்லை'' - 'தலைவி' படத்திற்கு தடைகோரிய வழக்கில் இயக்குனர் தரப்பு வாதம்!

03:06 PM Feb 09, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படும் 'தலைவி' திரைப்படத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் 'தலைவி' படம் எடுக்க தடைவிதிக்க முடியாது என படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘தலைவி’ படம் எடுக்க தீபாவிடம் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் படத்தை தீபா தரப்பிடம் போட்டுக்காட்ட வேண்டிய தேவையும் இல்லை எனவும் இயக்குனர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT