Advertisment

இஸ்லாமியர் இல்ல விழாவிற்கு தாம்பூலத்தில் சீர் கொண்டு போன இந்துக்கள்!

Hindus dressed up for the Islamic Home Festival!

Advertisment

தமிழ்நாட்டில் தான் இந்து கோயில் குடமுழுக்கு உள்ளிட்ட திருவிழாக்களுக்கு இஸ்லாமியர்கள் மதநல்லிணக்கத்தோடும், சகோதர பாசத்தோடும், ஆட்டம் பாட்டத்துடன் சீர் கொண்டு சென்று கொடுத்து நட்புறவை வலுப்படுத்தி வருகின்ற சம்பவங்கள் நடந்தேறுகிறது.

அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகில் உள்ள மழையூர் கிராமத்தில் உள்ள முகமது சித்திக் என்பவரின் இல்லத்தில் குழந்தைகளுக்கு பூ போடுதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் அழைப்பு கொடுத்திருந்தனர். முகமது சித்திக்கின் அழைப்பை ஏற்ற அப்பகுதி இந்து சகோதர, சகோதரிகள் மத வேறுபாடுகள் மறந்து தங்கள் உறவு வீட்டு நிகழ்வாக நினைத்து தாம்பூலங்களில் பழம் உள்ளிட்ட மாமன் சீர் எடுத்துச் சென்று விழாவில் கலந்து கொண்டனர். பொது நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளிலும் கூட நட்புறவுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

pudukkottai temple
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe