இன்று (10.01.2022) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் அழைப்பின்படிமாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

அதில் பாரதப்பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி செய்த காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில அரசை கண்டித்தும், பிரதமர் வாகனத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பினர். மாநில அமைப்பு பொதுச்செயலாளர் பா.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாநகர, மாவட்ட, தொகுதி, வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment