Skip to main content

'வருகிற தேர்தலில் நடிகர் ரஜினியின் ஆன்மிக அரசியல்தான் வெற்றிபெறும்'-அர்ஜூன் சம்பத் பேட்டி!

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

hindu party arjun sampath pressmeet

 

ரஜினியின் ஆன்மிக அரசியல் வெற்றியடைய சென்னிமலையில் கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சி நடக்க இருப்பதாக இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் ஈரோட்டில் இன்று மறைந்த ராமகோபாலன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், "ஆன்மிகம், தேசியத்திற்காக பாடுபட்ட ராமகோபாலனுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும். அவருக்கு தமிழக அரசு மணி மண்டபம் கட்ட வேண்டும். மேலும் கறுப்பர் கூட்டம் தற்போது குருஜி என்ற பெயரில் செயல்பட்டு கந்தசஷ்டி கவசத்தை தொடர்ந்து அவமதித்து வருகிறது.

இது குறித்து தமிழக முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 'ஒரு நாடு ஒரு ரேசன்' திட்டம் சிறப்பான திட்டம். இந்த திட்டம் குறித்து தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவதூறு பரப்பி வருகின்றனர். அதனை முறியடித்து திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக அரசியல் அணியை உருவாக்கி வெற்றிபெற வைக்க இந்து மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும். நடிகர் ரஜினியின் ஆன்மிக அரசியல் வெற்றியடைய ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆன்மீக அரசியல் என்பது வளர்ச்சி, ஊழலற்ற ஆட்சியாகும். தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.கவில் உட்கட்சிப் பூசல் எதுவும் கிடையாது. அரசியல் ரீதியாக ஆதாயம் அடைய தி.மு.க.தான் தூண்டிவிட்டு வருகிறது." என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமார் 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Sarathkumar merged the party into the BJP

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

திமுக, கூட்டணி, தொகுதிப்பங்கீட்டை முடித்து வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, பாமக திடீரென பாஜகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜக கூட்டணியில் உள்ள தமாகா, தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டி.டி.வி.தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணி வைக்கவும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அதேநேரம் சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அண்மையில் நடிகர் சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

பாஜக-சமத்துவ மக்கள் கட்சி இடையே விரைவில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அறிவிப்பாக தனது கட்சியான சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத்குமார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக தெரிவித்துள்ள சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது கட்சியின் முடிவல்ல என்றும் இது மக்கள் பணிக்கான தொடக்கம் என விளக்கம் அளித்துள்ளார்.