Skip to main content

கிறிஸ்மஸ் விழா...  நள்ளிரவில் தகராறு செய்த இந்து அமைப்பினர் - போலீஸார் எச்சரிக்கை

Published on 25/12/2019 | Edited on 25/12/2019

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்மந்திகுப்பம் கிராமத்தில் கடந்த ஆண்டு மோசஸ் என்பவர் குடிசை ஒன்றை அமைத்து அதில் ஜபகூட்டம் நடத்ததி வந்துள்ளார். இதற்கு இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். குடிசை சர்ச்சில் ஒலி பெருக்கி கட்டக்கூடாது என இந்து அமைப்பை சேர்ந்தவர்களும், கோயிலில் பாட்டு பாடினால் மோசஸ் தரப்பினரும் மாறி மாறி காவல்துறை மற்றும் கலெக்டரிடம் புகார் மனு தந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் இரு குழுக்களிடையே அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் நடைபெற்று வந்துள்ளது.

 

yy


இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ந்தேதி இரவு, மோசஸ் தனது ஜபகூடதில் ஒலிபெருக்கி அமைத்து, மதபோதகர்களை அழைத்து வந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை  கொண்டாட ஏற்பாடுகளை செய்துவந்துள்ளார். இதனை இந்து அமைப்பை சேர்ந்த சிலர் சென்று தகராறு செய்து தடுக்க முயன்றுள்ளனர். அதோடு வெளியூர் மதபோதகர்கள் ஊருக்குள் அழைத்து வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஒலிபெருக்கி அமைக்க  வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் அனுமதி கேட்டும், பண்டிகையை கொண்டாடக்கூடாது என தடுப்பவர்கள் குறித்து மனு  அளித்துள்ளார் மோசஸ்.  இதையடுத்து போலீசார் சம்பந்திகுப்பத்தை சேர்ந்த இந்து அமைப்பை சேர்ந்த சக்திவேல்  மற்றும் அருள் குமார் ஆகியோரை காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் சொன்ன பதிலால் அதிருப்தியான போலிஸார், விழாவை தடுக்கமாட்டோம் என எழுதி தந்துவிட்டு செல்லுங்கள் எனச்சொல்லியுள்ளனர்.

முடியாது எனச்சொன்னதால், அவர்களை காவல்நிலையத்திலேயே உட்காரவைத்துள்ளனர். அவர்கள் தங்கள் பகுதியை சேர்ந்தவர்களிடம் காவல்நிலையத்தில் தங்களை உட்காரவைத்துவிட்டதாக சொல்ல இந்து அமைப்பை சேர்ந்தவர்களும், அவர்களது உறவினர்களும் ஆத்திரம் அடைந்து வாணியம்பாடி - ஆம்பூர் கிராம சாலையில் அமர்ந்து  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

y

 

இந்த தகவல் போலீஸார் அங்கு வந்தனர். இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க அந்த கிராமத்தில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் மத உரிமை உள்ளது. அவர்கள் திருவிழாவை அவர்கள் கொண்டாடுகிறார்கள். அதனை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது என போலீஸாரும், வருவாய்த்துறையினரும் பேசி சமாதானம் செய்தனர்.

அவர்களின் உரிமையை தடுத்தால் தான் அவர்களை காவல்நிலையத்தில் உட்காரவைத்துள்ளோம் என போலீஸார் சொல்லினர். அவர்களை விடுவிக்க வேண்டும் என சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட குழுவினர் கோரிக்கை வைத்தனர்.  அவர்கள் எழுதி தந்தால் விட்டுவிடுகிறோம் எனச்சொல்லினர். இதனை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர் அப்பகுதி மக்கள். இந்து அமைப்பை சார்ந்த இருவரும் எழுதி தந்துவிட்டு காவல்நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். வேறு எதுவும் தகராறில் ஈடுப்பட்டுவிடக்கூடாதுயென அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.