Advertisment

சிதம்பரத்தில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு டி.ஆர். பாலு மாலை அணிவித்து மரியாதை

b

சிதம்பரத்தில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு டி.ஆர். பாலு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Advertisment

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு உயிர் நீத்த மாணவர் தியாகி ராஜேந்திரன் சிலை அண்ணாமலைப் பல்கலைக்கழக வாயிலில் உள்ளது. இந்த சிலைக்கு மொழிப்போர் தியாகி தினமான இன்று திமுகவின் முதன்மை செயலாளர் டி. ஆர். பாலு, திமுகவின் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியினர் பேரணியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Advertisment

b

அதேபோல் அஇஅதிமுக சார்பில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், சிதம்பரம் தொகுதி எம்பி சந்திரகாசி உள்ளிட்ட கட்சியினர், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பல்கலைக்கழக மாணவர்கள், மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பேரணியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe