இந்தி திணிப்பு; இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

ஒன்றிய அரசின் இந்தி மொழி திணிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI), இந்திய மாணவர் சங்கம் (SFI)ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், சென்னை மாவட்டம் சார்பில் அண்ணாசாலை அஞ்சலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில்ஈடுபட்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர். டி.ஒய்.எஃப்.ஐ. மாநிலச் செயலாளர் சிங்காரவேலு, எஸ்.எஃப்.ஐ. மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Hindi imposition
இதையும் படியுங்கள்
Subscribe