Skip to main content

"இந்தி தெரியாமல் சிவில் தேர்வில் பாஸ் செய்தும்.." - அண்ணாமலை

Published on 13/10/2022 | Edited on 13/10/2022

 

Hindi Language; "Tamil Nadu is in Category C" - Annamalai

 

அமெரிக்கா சென்றிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னை திரும்பினார். அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின் அவர் செய்தியாளைகளை சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “திமுக இந்தியை திணிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தான் ஆட்சிக்கு வந்தார்கள். அதனைத் தொடர்ந்து பல்வேறு காலக்கட்டங்களில் இந்தியை திணிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியோடு தான் கூட்டணியும் வைத்தார்கள். புதிய கல்விக்கொள்கை அறிக்கையில் இந்தி கட்டாயக் பயிற்று மொழியாக இருக்கும் என்பதை மாற்றி மூன்றாவது மொழியாக நீங்கள் எதை வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதை கொண்டுவந்தார். அது தான் இந்தியாவின் அதிகாரப்பூர்வமான கருத்து. இதில் அலுவலக மொழிக்கு ஒரு கமிட்டி இருக்கிறது.

 

இதற்கு முன்பு ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த பொழுது அந்த கமிட்டியின் தலைவராக இருந்தார். இப்பொழுது அமித்ஷா அந்த கமிட்டியின் தலைவராக இருக்கிறார். அந்த கமிட்டி கொடுத்த அறிக்கையில் இந்தியாவை பொறுத்தவரை கேட்டகிரி ஏ, பி, சி என மூன்று அமைப்புகளாக பிரித்து வைத்திருக்கிறார்கள். இந்தி மொழியை முழுமையாக பயன்படுத்தும் மாநிலங்கள் கேட்டகிரி ஏ. பாதிப்பயன்படுத்தும் மாநிலங்கள் கேட்டகிரி பி, பயன்படுத்தாத மாநிலங்கள் கேட்டகிரி சி. அதன் அடிப்படையில் தமிழகம் கேட்டகிரி சி மாநிலம். 

 

இந்த கமிட்டியின் அறிக்கை கேட்டகிரி எ மாநிலத்தை பொறுத்தவரை அவர்களுடைய பயிற்று மொழி இந்திக்கு மாற வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். இதை தான் புதிய கல்விக்கொள்கையிலும் சொல்லி இருக்கிறோம். ஆறாம் வகுப்பு வரை உங்களுடைய தாய் மொழிதான் பயிற்று மொழியாக இருக்கும். அதன்படி புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால் ஆறாம் வகுப்பு வரை பயிற்று மொழியாக தமிழ் மட்டுமே இருக்கும். ஹிரியனா, உத்திரபிரதேசத்தை பொறுத்தவரை இந்தியாக இருக்கும். கேட்டகிரி ஏ மாநிலங்கள் செய்ய வேண்டியதை ஒரு அறிக்கையாக கொடுத்திருப்பதாக அறிகின்றேன். 

 

அதே சமயத்தில் திமுக இளைஞரணி திமுகவின் மாணவரணி 15ம் தேதி போராட்டத்திற்கு அறிவித்திருப்பதாக கூட நான் அறிகிறேன். அந்த போராட்டத்திற்காக ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். அதாவது, மத்திய அரசின் பல்கலைக்கழகத்தில் தேர்வு வினாத்தாளில் இந்தி என்பதை மட்டும் கட்டாய மொழியாக மத்திய அரசு வைக்கிறது. இதை எதிர்த்து நாங்கள் போராட்டம் செய்ய போகிறோம் என்று. 

 

திமுக மாணவரணி சொல்லக் கூடிய ஐஐஎமில் படித்திருக்கிறேன். இந்தி ஒரு வார்த்தை தெரியாமல் ஆங்கிலத்தில் லக்னோவில் படித்துவிட்டு உங்கள் முன் பேசிக்கொண்டு இருக்கிறேன். அதேபோல் சிவில் சர்வீஸ் தேர்வினை பற்றியும் திமுகவின் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். ஒரு வார்த்தை இந்தி தெரியாமல் சிவில் தேர்வில் பாஸ் செய்து இன்னொரு மாநிலத்தில் பணி செய்யும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

 

ஆனால் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அட்டவணை 8ல் இருக்கும் மொழிகள் தான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகள். இந்தியாவில் நடத்தகூடிய எந்த தேர்வாக இருந்தாலும் கூட எட்டாம் அட்டவணையில் இருக்கக் கூடிய மொழிகளில் மட்டும் தான் நடத்த வேண்டும். அதிலே, நம் தமிழும் இருக்கிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. எந்த கமிட்டியும் வித்தியாசமான அறிக்கையை கொடுக்கவில்லை. அதனால் இல்லாத ஒரு பொய்யை கிளப்பி ஆளும் கட்சியின் மீது மக்களுக்கு இருக்கக் கூடிய அபிப்பிராயம் கோபம் இதை எல்லாம் மறைப்பதற்கு திமுக கபட நாடகம் ஆடுகிறது” எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.