இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர்- 20 ஆம் தேதி திமுக சார்பில் நடைபெறவிருந்த போராட்டம் தற்காலிக ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
தமிழக ஆளுநர் உடனான சந்திப்புக்கு பின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர்- 20 ஆம் தேதி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். செப்டம்பர்- 20 ஆம் தேதி ஏன் போராட்டம் நடத்தவுள்ளீர்கள் என்று ஆளுநர் கேட்டதாக மு.க.ஸ்டாலின் கூறினார். மத்திய அரசு எந்த வகையிலும் இந்தி திணிக்காது என்று ஆளுநர் உறுதியளித்துள்ளதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தி திணிப்பை திமுக என்றும் எதிர்க்கும் என்றார்.