Skip to main content

சமஸ்கிருதம் பெற்றெடுத்த பிள்ளைதான் இந்தி! அதனால்தான் இயல்பாகவே தமிழர்களின் ரத்தம் கொதிக்கிறது- கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் பேச்சு!!

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தமிழ்நாடு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ‘மும்மொழித் திட்டமும் ஒற்றைக் கலாச்சார முயற்சியும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் கலந்த கொண்டு பேசினார். 

 

காஷ்மீரில் இருந்து நாகர்கோவில் வரை நாகர் இனத்தவர்கள் வாழ்த்துள்ளனர். நாகர்கள்தான் அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். அரசுரர்கள் வேறு யாரும் அல்ல. அவர்கள் திராவிடர்களே! எனவே, ஆரியர் வருகைக்கு முன்பாக இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழியாக தமிழ்மொழி இருந்துள்ளது என்பதற்கான ஆதாரத்தை அண்ணல் அம்பேத்கர் நிறுவியுள்ளார்.

 

 Hindi is a child born to Sanskrit!That's why the blood of Tamils ​​is naturally boiling !- Poet Rasi Panneerselvam Speech !!



செவ்வியல் மொழிகளில் ஒன்றாகிய சமஸ்கிருதம் யாகம் நடத்தி அழிக்க வேண்டும் என்கிறது. தமிழ்மொழியோ நேருக்கு நேராக போர்புரிந்து வெல்ல வேண்டும் என்றது. ஆரியர்களின் சூழ்ச்சியால் வடஇந்தியாவில் சமஸ்கிருதம் ஆதிக்கம் பெற்றது. சமஸ்கிருதம் பெற்றெடுத்த பிள்ளைதான் இந்தி. அதனால்தான் இந்தி திணிப்பு என்றதும் இயல்பாகவே தமிழர்களின் ரத்தம் கொதிக்கிறது.

 

 

இந்தி மொழியின் வயது அதிகபட்சம் நானூறு வருடம்தான். செவ்வியல் மொழிகளில் இன்றும் உயிரோடு இருப்பது சீனமும், தமிழும்தான். கடந்த 2004-ல் தமிழை சொம்மொழியாக மத்திய அரசு அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து தமிழில் இருந்து பிரிந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளும் செம்மொழிக்கான தகுதியைப் பெற்றது. ஆனால், வட மாநிலங்களில் உள்ள எந்தவொரு மொழியும் செம்மொழிக்கான தகுதியைப் பெறவில்லை.

 


9 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேசத்தில 32 கோடி பேர் மட்டுமே இந்தி மொழியை பேசுகின்றனர். 125 கோடியில் 32 கோடி பேர் மட்டுமே பேசும் மொழியை எப்படி தேசிய மொழியாக ஏற்க முடியும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்தி அலுவல் மொழிதானே தவிர. ஆட்சி மொழி அல்ல. 1965-ல் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்தியின் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றியது. இந்தியாவை முழுவதையும் இணைத்திருப்பது ஆங்கிலமும், ரயில்  தண்டவாளங்களும்தான்.

 



தற்பொழுது மும்மொழித் திட்டம் என்ற போர்வையில் மீண்டும் இந்தியைத் திணிக்க தீவிர முயற்சி நடக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக வேறு எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் இந்தி ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் மறைமுகமாக நீங்கள் இந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மிரட்டுகின்றனர். அதே நேரத்தில் இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இவர்கள் அறிவித்திருப்பது சமஸ்கிருதத்தை. 

 

இவர்களின் நரித்தனம் புரிகிறதா? நேரடியாக சமஸ்கிருதத்தை புகுத்த முடியாத மாநிலங்களில் இந்தியின் மூலம் சமஸ்கிருதத்தைப் புகுத்தப் பார்க்கின்றனர். இதன் மூலம் சமூகநீதிக்கு எதிரான சனாதன ஆட்சியை நிறுவுவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். 



தமிழக அமைச்சர் ஒருவர் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்கிற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுவிட்டோம் எனக் கூறுகிறார். கட்சிப் பெயரில் திராவிடத்தை வைத்திருக்கும் ஒரு கட்சியின் ஆட்சி இந்த லட்சணத்திற்கு வந்துவிட்டது. அடிப்படையில் இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. அது பலவேறு ஒன்றியங்களின் கூட்டமைப்பு. அதனால்தான் இந்தியாவை துணைக் கண்டம் என்கிறோம். உலகில் உள்ள அனைத்து தப்பவெட்ப நிலைகளும், அனைத்து விதமான வளங்களும் இந்தியாவில் இருக்கிறது. 600-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகத் தன்மைதான் இந்தியாவில் சிறப்பு. இதை சிதைக்கப் பார்க்கிறார்கள். 

 


தற்பொழுது அறிவித்திருக்கும் தேசியக் கல்விக் கொள்கை சிறுபாண்மையினரின் கல்வி உரிமையை ஒழித்துக் கட்டுகிறது. பெரு மதவாதத்தை முன்னிறுத்துகிறது. இந்து தேசியம் என்ற போர்வையில் இந்து பாசிசம் தனது கோர முகத்தை காட்ட முயற்சிக்கிறது. இதற்கு தமிழக மக்கள் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள். அது இந்திய முழுமைக்கும் இந்தி திணிப்புக்கு எதிரான பதிலடியாக இருக்கும் என்றார்.

 


கருத்தரங்கிற்கு ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் உமாபதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சு.மதியகழன் வாழ்த்துரை வழங்கினார். ரோஸ்னி அப்துல்லா கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சியை  மாவட்டத் தலைவர் எம்.ஸ்டாலின் தொகுத்து வழங்கினர். முன்னதாக கிளைப் பொருளாளர் வரவேற்க, காசிராஜா நன்றி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.