Advertisment

நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

திமுக அரசு அமைந்த உடன் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி அறிவிக்கப்படும் என முதல் அமைச்சர் அறிவித்த வாக்குறுதியின் படி கோரிக்கையை நிறைவேற்றி வழங்கிட வேண்டும், தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், சாலை பணியாளர்களின் பணி முழுவதும் ஆபத்து நிறைந்த பணிகளாக உள்ளது, தமிழக அரசும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமும் கருத்தில் கொண்டு சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment

protest
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe