Skip to main content

நெடுஞ்சாலைகளில் தொடர் திருட்டு...முக்கிய குற்றவாளி கேரளாவில் கைது!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

கோவை-பாலக்காடு நெடுஞ்சாலைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளியை கேரளாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது  சிறையில் அடைத்தனர். 

 

Highway thief arrested in Kerala

 



கடந்த நவம்பர் 18 ஆம் தேதி ஆந்திராவில் இருந்து கோவை வழியாக பாலக்காடு சென்ற லாரி வேலந்தாவளம் அருகே வரும் போது சிறை பிடித்த மர்ம கும்பல் லாரி ஓட்டினரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் , செல்லிடப்பேசியை பறித்து சென்றது. அப்போது தப்பி ஓட முயற்ற அக்கும்பலை சேர்ந்த அனஸ்பாபு (29) என்பவரை ரோந்து பணியில் இருந்த காவலர்கள் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து தப்பி சென்ற 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பிடிப்பட்ட அனஸ்பாபுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நெடுஞ்சாலையில் இதே போல் இந்த கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும், கொள்ளைக்கு கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஹக்கீம் (32) மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. 

இதையடுத்து மதுக்கரை காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில், உதவி ஆய்வாளர் சாஜகான், தலைமை காவலர் ரவிசங்கர், ஜிவானந்தம் அடங்கிய தனிப்படை கேரளா விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த ஹக்கீமை கைது செய்த போலீசார், கோவை அழைத்து வந்து மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஹக்கீம் மீது தமிழகத்தில் பல வழக்குகள் நிழுவையில் உள்ளது.

அவனிடம் நடத்திய விசாரணையில், நெடுஞ்சாலைகளில் குட்கா பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளை மட்டும் குறி வைத்து, கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாகவும், குட்கா பொருட்களை கொள்ளையடிக்கும் போது காவல் நிலையத்திற்கு புகார் வராது என்பதால் அதை தொடர்ந்து செய்ததாகவும், அவ்வாறு கொள்ளையடிக்கும் குட்காவை வேறு பகுதிக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்தது. 

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் அரூரில் அரிசி லோடு ஏற்றி சென்ற லாரியை சிறை பிடித்து ஓட்டுநரை தாக்கி விட்டு 90 டன் அரிசியுடன் லாரியை கொள்ளையடித்து சென்றதும், இதே போல் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“வலி தாங்க முடியவில்லை” - மனைவி அடிப்பதால் கணவன் தற்கொலை முயற்சி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Husband try lost their life due to wife beating in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே  வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகேஷ் திடீரென்று ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் தற்கொலை செய்வதற்காக இறங்கி உள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கத்திக் கொண்டே ஏரியில் நாகேஷ் இறங்கி இருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  அங்கிருந்தவர்கள் நாகேஷை ஏரியை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் நாகேஷ் ஏரியை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து அங்கிருந்த மக்களே ஏரியில் குதித்து  நாகேஷை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

பின்பு நாகேஷிடம் ஏன் தற்கொலை செய்ய முயற்சி செய்தீர்கள் என்று விசாரித்ததில், என் மனைவி என்னை தினமும் அடிக்கிறாள்; என்னால் வலி தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என் குழந்தைகளிடம் கூட என்னை பேச அனுமதிப்பதில்லை. அவர்களிடம் அப்பா இறந்துவிட்டடாக கூறியிருக்கிறாள். அவள் என்னை சித்திரவதை செய்கிறாள். எனக்கும் என் மனைவிக்கும் விவகாரத்து வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்” என்று வேதனையோடு கூறியிருக்கிறார். இதனை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வேகமாக பரவி வருகிறது.

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.