Skip to main content

வேலூரில் நெடுஞ்சாலை கொள்ளையர்கள் அட்டகாசம்– தீவிரம் காட்டாத போலீஸ்!

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எஸ் என்கிற தனியார் பார்சல் சர்விஸ் வேனில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்த 38 வயதான ஜம்புலிங்கம். இவர் செப்டம்பர் 24ந்தேதி இரவு சென்னையில் இருந்து ஒரு லாரியில் பலவிதமான பொருட்களை ஏற்றிக்கொண்டு பெங்களுரூவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் வந்துக்கொண்டு இருந்துள்ளார். வேலூர் மாவட்டம் ரத்தினகிரி அடுத்த பூஞ்சோலை என்கிற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் வண்டியை நிறுத்திவிட்டு தூக்க கலக்கத்தில் கண்ணயர்ந்துள்ளார்.

 

Highway robbers in Vellore - No serious police!


விடியற்காலை 4 மணியளவில் தனது வண்டியின் பின் பக்கம் யாரோ உடைப்பது தெரிந்து, வண்டியில் இருந்து இறங்கி பின்பக்கம் வந்து பார்த்துள்ளார். சிறிய லாரியின் பின்பக்க கதவை உடைத்து உள்ளிருந்த பொருட்களை தங்களது வேனில் மாற்றி ஏற்றிக்கொண்டுயிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே கத்தி கூச்சல் போட்டதும் ஜம்புலிங்கத்தை பிடித்து தள்ளிவிட்டு தங்களது வேனை எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளார்கள். இவரும் தனது வண்டியை எடுத்துக்கொண்டு விடாமல் துரத்தியுள்ளார். அப்படி துரத்தி செல்ல அவர்கள் முதலில் பெங்களுரூ நோக்கி சென்றவர்கள் பின்னர் சென்னை நோக்கி திரும்பி சென்றுள்ளனர். இவரும் விடாமல் துரத்த ஒருக்கட்டத்தில், ஆம்பூர் அடுத்த வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையிலேயே தங்களது வாகனத்தை நிறுத்தியுள்ளனர் கொள்ளை கும்பல். தனது வண்டியை அருகில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் ஜம்புலிங்கம், அவர்களை மடக்கி கேள்வி எழுப்பும்போது ஜம்புலிங்கத்தை அடித்து உதைத்துவிட்டு சென்றுள்ளனர்.

 

Highway robbers in Vellore - No serious police!


அடிவாங்கி ரத்தத்தோடு இருந்த ஓட்டுநர் ஜம்புலிங்கத்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்தி முதலுதவி செய்துள்ளனர். பின்னர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செப்டம்பர் 25ந்தேதி விடியற்காலை சேர்த்துள்ளனர். நடந்தது பற்றி ஜம்புலிங்கம் வந்து விசாரணை நடத்திய காவலரிடம் கூற அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை – பெங்களுரூ, சென்னை – கொச்சி தேசிய நெடுஞ்சாலை என்பது வேலூர் வழியாக செல்கிறது. இந்த சாலை மிக முக்கியமான சாலை. தினமும் லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கின்றன. அதில் பாதி வாகனங்கள் சரக்கு வாகனங்களாகும். இந்த வாகனங்கள் பெரும்பாலும் இரவு நேரத்திலேயே பயணம் செய்கின்றன.

 

Highway robbers in Vellore - No serious police!


இரவில் ஓட்டுநர்கள் தங்களது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டு செல்கின்றனர். அந்த நேரத்தில் லாரியை திருடுவது, லாரி மற்றும் சரக்கு வாகனங்களில் இருந்து பொருட்களை திருடும் போக்கு இந்த சாலையில் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் பயத்துடனே பயணத்தை செய்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்காக, பாதுகாப்புக்காக வேலூர் மாவட்டத்தில் மட்டும் 4 குழுக்கள் செயல்படுகின்றன. அந்த குழு பாலாற்றில் மணல் கடத்துபவர்களை கண்டும் காணாமல் மாமூல் வாங்கிக்கொண்டு விடுவது போல், நெடுஞ்சாலை கொள்ளையர்களை வாங்குவதை வாங்கிக்கொண்டு விட்டு விடுகிறார்களோ என்கிற ஐயம் உள்ளது என்கிறார்கள் மோட்டார் தொழிலில் உள்ளவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வலி தாங்க முடியவில்லை” - மனைவி அடிப்பதால் கணவன் தற்கொலை முயற்சி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Husband try lost their life due to wife beating in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே  வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகேஷ் திடீரென்று ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் தற்கொலை செய்வதற்காக இறங்கி உள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கத்திக் கொண்டே ஏரியில் நாகேஷ் இறங்கி இருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  அங்கிருந்தவர்கள் நாகேஷை ஏரியை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் நாகேஷ் ஏரியை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து அங்கிருந்த மக்களே ஏரியில் குதித்து  நாகேஷை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

பின்பு நாகேஷிடம் ஏன் தற்கொலை செய்ய முயற்சி செய்தீர்கள் என்று விசாரித்ததில், என் மனைவி என்னை தினமும் அடிக்கிறாள்; என்னால் வலி தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என் குழந்தைகளிடம் கூட என்னை பேச அனுமதிப்பதில்லை. அவர்களிடம் அப்பா இறந்துவிட்டடாக கூறியிருக்கிறாள். அவள் என்னை சித்திரவதை செய்கிறாள். எனக்கும் என் மனைவிக்கும் விவகாரத்து வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்” என்று வேதனையோடு கூறியிருக்கிறார். இதனை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வேகமாக பரவி வருகிறது.

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.