Skip to main content

வேலூரில் நெடுஞ்சாலை கொள்ளையர்கள் அட்டகாசம்– தீவிரம் காட்டாத போலீஸ்!

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எஸ் என்கிற தனியார் பார்சல் சர்விஸ் வேனில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்த 38 வயதான ஜம்புலிங்கம். இவர் செப்டம்பர் 24ந்தேதி இரவு சென்னையில் இருந்து ஒரு லாரியில் பலவிதமான பொருட்களை ஏற்றிக்கொண்டு பெங்களுரூவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் வந்துக்கொண்டு இருந்துள்ளார். வேலூர் மாவட்டம் ரத்தினகிரி அடுத்த பூஞ்சோலை என்கிற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் வண்டியை நிறுத்திவிட்டு தூக்க கலக்கத்தில் கண்ணயர்ந்துள்ளார்.

 

Highway robbers in Vellore - No serious police!


விடியற்காலை 4 மணியளவில் தனது வண்டியின் பின் பக்கம் யாரோ உடைப்பது தெரிந்து, வண்டியில் இருந்து இறங்கி பின்பக்கம் வந்து பார்த்துள்ளார். சிறிய லாரியின் பின்பக்க கதவை உடைத்து உள்ளிருந்த பொருட்களை தங்களது வேனில் மாற்றி ஏற்றிக்கொண்டுயிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே கத்தி கூச்சல் போட்டதும் ஜம்புலிங்கத்தை பிடித்து தள்ளிவிட்டு தங்களது வேனை எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளார்கள். இவரும் தனது வண்டியை எடுத்துக்கொண்டு விடாமல் துரத்தியுள்ளார். அப்படி துரத்தி செல்ல அவர்கள் முதலில் பெங்களுரூ நோக்கி சென்றவர்கள் பின்னர் சென்னை நோக்கி திரும்பி சென்றுள்ளனர். இவரும் விடாமல் துரத்த ஒருக்கட்டத்தில், ஆம்பூர் அடுத்த வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையிலேயே தங்களது வாகனத்தை நிறுத்தியுள்ளனர் கொள்ளை கும்பல். தனது வண்டியை அருகில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் ஜம்புலிங்கம், அவர்களை மடக்கி கேள்வி எழுப்பும்போது ஜம்புலிங்கத்தை அடித்து உதைத்துவிட்டு சென்றுள்ளனர்.

 

Highway robbers in Vellore - No serious police!


அடிவாங்கி ரத்தத்தோடு இருந்த ஓட்டுநர் ஜம்புலிங்கத்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்தி முதலுதவி செய்துள்ளனர். பின்னர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செப்டம்பர் 25ந்தேதி விடியற்காலை சேர்த்துள்ளனர். நடந்தது பற்றி ஜம்புலிங்கம் வந்து விசாரணை நடத்திய காவலரிடம் கூற அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை – பெங்களுரூ, சென்னை – கொச்சி தேசிய நெடுஞ்சாலை என்பது வேலூர் வழியாக செல்கிறது. இந்த சாலை மிக முக்கியமான சாலை. தினமும் லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கின்றன. அதில் பாதி வாகனங்கள் சரக்கு வாகனங்களாகும். இந்த வாகனங்கள் பெரும்பாலும் இரவு நேரத்திலேயே பயணம் செய்கின்றன.

 

Highway robbers in Vellore - No serious police!


இரவில் ஓட்டுநர்கள் தங்களது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டு செல்கின்றனர். அந்த நேரத்தில் லாரியை திருடுவது, லாரி மற்றும் சரக்கு வாகனங்களில் இருந்து பொருட்களை திருடும் போக்கு இந்த சாலையில் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் பயத்துடனே பயணத்தை செய்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்காக, பாதுகாப்புக்காக வேலூர் மாவட்டத்தில் மட்டும் 4 குழுக்கள் செயல்படுகின்றன. அந்த குழு பாலாற்றில் மணல் கடத்துபவர்களை கண்டும் காணாமல் மாமூல் வாங்கிக்கொண்டு விடுவது போல், நெடுஞ்சாலை கொள்ளையர்களை வாங்குவதை வாங்கிக்கொண்டு விட்டு விடுகிறார்களோ என்கிற ஐயம் உள்ளது என்கிறார்கள் மோட்டார் தொழிலில் உள்ளவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.