கடந்த ஜூலை 26-ஆம் தேதி, ‘நேர்மையைக் கொண்டுபோய் குப்பையில்போடு! – ஊழல் புரிவதில் உறுதியுடன் நெடுஞ்சாலைத்துறை!’ என்னும்தலைப்பில், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சிவகிரிபிரிவு (நெல்லை மாவட்டம்) அலுவலகத்தில், இளநிலை பொறியாளராக, நேர்மை தவறாமல் கொள்கை உறுதியோடு பணிபுரிந்துவரும் மு.மாரிமுத்துகுறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.

highway department officers phone discussion

Advertisment

நேர்மையை தீவிரமாகக் கடைப்பிடித்தால் சோதனை வராமலா இருக்கும்?அச்சோதனை, மேலதிகாரிகள் மூலம் மாரிமுத்துவைக் கடுமையாகத்துரத்துகிறது. 5-ஆம் வகுப்பு வரை படித்த மாரிமுத்து 1997-ல் சாலைப் பணியாளராகத்தான்அரசுப் பணியில் அடியெடுத்து வைத்தார். அதன்பிறகு 8, 10 மற்றும் 12-ஆம்வகுப்புகளில் தேர்ச்சி பெற்று, பி.காம்., எம்.காம். முடித்து, பகுதி நேரமாணவராகப் பயின்று டி.சி.இ., முடித்துவிட்டு, முதலில் சாலைஆய்வாளராகவும், தற்போது இளநிலை பொறியாளராகவும் பதவி உயர்வுபெற்றவர் ஆவார்.

‘லஞ்சம் தவிர்த்து! நெஞ்சம் நிமிர்த்து!’ என உறுதியுடன் அரசுத் துறையில்பணிபுரியும் மாரிமுத்து, ‘தன்னுடைய ரோல் மாடல் சகாயம்ஐ.ஏ.எஸ்.தான்.’ என்று கூறி வருபவர். இப்படிப்பட்ட மாரிமுத்துவுக்கு, உரியவிடுப்பு அனுமதி பெறாமல் ஈட்டிய விடுப்பில் சென்றதாகவும், தன்னுடையபதவியின் முக்கியத்துவம் பற்றி கவலைப்படாமல் பணியில் நேர்மையும்பற்றும் இன்றி உள்ளதாகவும் குறிப்பாணை அனுப்பி தன்னிலை விளக்கம்கேட்டார், நெடுஞ்சாலை க(ம)ப பிரிவின் தென்காசி கோட்டப் பொறியாளர்சுந்தர்சிங்.

Advertisment

‘தன்னிலை விளக்கம்தானே! தாராளமாக அளிக்கிறேன்!’ என்கிற ரீதியில்,விரிவாக ஒரு கடிதம் அனுப்பினார் மாரிமுத்து. ‘நான் ஈட்டிய விடுப்புதொடர்ந்து 99 நாட்கள் எடுத்ததற்குக் காரணமே தென்காசி கோட்டப்பொறியாளர்தான் . வேறு வழியில்லாமல் (நெ) க (ம) ப தென்காசி கோட்டப்பொறியாளரும் நானும் பேசிய பேச்சை அப்படியே ‘ரிபீட்’ செய்கிறேன்.’ என்றுகோட்டப் பொறியாளருக்கு எழுதி, அதன் நகல்களை முதன்மை இயக்குநர்(நெ) வரைக்கும் அனுப்பிவிட்டார். கிணற்றில் போட்ட கல்லாக மாரிமுத்துஅளித்துள்ள தன்னிலை விளக்கத்தை மேலதிகாரிகள் கிடப்பில் போட்டுவிட்ட நிலையில், அந்த உரையாடல் தற்போது அம்பலமாகி,நெடுஞ்சாலைத்துறையின் ஊழலை சந்தி சிரிக்க வைத்திருக்கிறது.

 மாரிமுத்து

கோட்டப் பொறியாளர் மற்றும் மாரிமுத்து இருவருக்கும் இடையில் நடந்தஉரையாடலில் குறிப்பிட்ட சில பகுதிகள் இதோ –

கோட்டப் பொறியாளர் : உங்களை மாதிரி ஆட்களை எல்லாம் இந்த D.Gரெகுலர் பிரிவில் போட்டு எங்களுக்கு ஏன் தலைவலியை உருவாக்குகிறார்என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரியாதா? மேலே இருந்து கிழே வரைஉள்ள அத்தனை கமிஷன் முறையும். 30 சதவீதம் வரை ஸ்பெஷல் பி.ஏ.க்குகொடுத்த பிறகுதான் (நெ) க (ம) ப பிரிவில் ஒப்பந்தகாரர்கள் பணியே எடுக்கமுடியும். எனவே, SEஅல்லது CE யே நினைத்தாலும் 100 சதவீதம் தரத்தோடுபணியினை வாங்க முடியாது. எனவே, உங்களால் முடிந்தவரை பணியைவாங்கிக்கொள்ளுங்கள்.

மாரிமுத்து: பிரிவு அலுவலரான JE ஒப்பந்தப்படி ஒப்பந்தகாரர்களிடம்பணியை வாங்க முடியாது. எனவே செய்த பணியைவிட கூடுதலாக பணிசெய்ததாக M.Book இல் நான் பதிவு செய்ய மாட்டேன். அதனால், ஒப்பந்தகாரர்பணிகள் இல்லாத அலுவலகப் பணியும், சாலைப் பணியாளர்களை வைத்துபராமரிக்கும் பணிகளையும் தந்தால், செய்வதற்கு நான் தயாராகஇருக்கிறேன்.

கோட்டப் பொறியாளர் : அப்படியெல்லாம் செய்ய முடியாது. அப்படியேசெய்ய அனுமதித்தாலும்.. அதிலும், SE அல்லது DE அலுவலகங்களுக்குபொது பணம் (காமன்) தர வேண்டியிருக்கும். அதனை நீங்க சாலைபழுதுபார்க்கும் கணக்கில் பெறப்பட்ட பணத்திலிருந்தும், அவசர பழுது நீக்கும்தலைப்பிலிருந்தும் மற்றும் சாலை சீரமைப்பு கணக்கு தலைப்பு போன்றஅத்தனை வகை பணிகளிலும் நீங்க நான் சொல்லுகிற மாதிரி்தான்,ங.இர்ர்ந்-இல் பதிவு செய்து தர வேண்டியது இருக்கும்.

மாரிமுத்து : நான் நேர்மையாக எனது ஊதியத்திற்காக மட்டுமே வேலைசெய்ய முடியாதா சார்?

கோட்டப் பொறியாளர் : 1 வருடம் ஆகாமல் இந்த DG உங்களை மாற்றவும்மாட்டார். நீங்கள் பணியில் இருந்தால் வேறு பிரிவு பொறியாளருக்கு கூடுதல்பொறுப்பு வழங்கவும் முடியாது. எனவே, நீங்கள் குடும்ப சூழல் எனதெரிவித்து 45 நாட்கள் ஈட்டிய விடுப்பு கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்.அப்போதுதான், நான் உங்கள் இடத்துக்கு வேறு பொறியாளரைக் கேட்டுவாங்க முடியும். . அப்புறம் உங்களுக்கு உரிய இடத்தை DG யிடம் பேசி நீங்கவாங்கிட்டு போங்க.

மாரிமுத்து : நான் அப்படியே செய்கிறேன். இருவரின் உரையாடலும் இப்படியே நீள்கிறது. மாரிமுத்து அளித்துள்ளதன்னிலை விளக்கக் கடிதத்தில், ‘குறிப்பாணையில் என் மீதுஏற்படுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும்,நான் பணியில் நேர்மையாக இல்லை என்ற குற்றச்சாட்டும் என் மீதுஉள்நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டுள்ளது.. அதனாலேயே, சிலவிபரங்களை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.’ என்றுசுட்டிக்காட்டத் தவறவில்லை.

ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் கொடியைப் பறக்கவிடவா சிறையில் அடைபட்டு, ரத்தம் சிந்தி, உயிரைவிட்டு நம் முன்னோர்கள் சுதந்திரம் வாங்கித் தந்தார்கள்? அரசுப் பணியில் இருந்துகொண்டு சில துறைகளில் நேர்மையாகப்பணிபுரிவதென்பது மிகப்பெரிய சவாலாகத்தான் இருக்கிறது.