Skip to main content

“யார் நினைத்தாலும் 100 சதவீதம் தரத்தோடு ஒப்பந்தப்பணி நடக்காது..” -நெடுஞ்சாலைத்துறை ஊழலை அம்பலப்படுத்தும் உரையாடல்!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

கடந்த ஜூலை 26-ஆம் தேதி, ‘நேர்மையைக் கொண்டுபோய் குப்பையில் போடு! – ஊழல் புரிவதில் உறுதியுடன் நெடுஞ்சாலைத்துறை!’ என்னும் தலைப்பில், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சிவகிரி பிரிவு (நெல்லை மாவட்டம்) அலுவலகத்தில், இளநிலை பொறியாளராக,  நேர்மை தவறாமல் கொள்கை உறுதியோடு பணிபுரிந்துவரும் மு.மாரிமுத்து குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.  

 

highway department officers phone discussion

 

 

நேர்மையை தீவிரமாகக் கடைப்பிடித்தால் சோதனை வராமலா இருக்கும்? அச்சோதனை, மேலதிகாரிகள் மூலம் மாரிமுத்துவைக் கடுமையாகத் துரத்துகிறது.  5-ஆம் வகுப்பு வரை படித்த மாரிமுத்து 1997-ல் சாலைப் பணியாளராகத்தான் அரசுப் பணியில் அடியெடுத்து வைத்தார். அதன்பிறகு 8, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று, பி.காம்., எம்.காம். முடித்து, பகுதி நேர மாணவராகப் பயின்று டி.சி.இ., முடித்துவிட்டு, முதலில் சாலை ஆய்வாளராகவும், தற்போது இளநிலை பொறியாளராகவும் பதவி உயர்வு பெற்றவர் ஆவார்.   

‘லஞ்சம் தவிர்த்து! நெஞ்சம் நிமிர்த்து!’ என உறுதியுடன் அரசுத் துறையில் பணிபுரியும் மாரிமுத்து, ‘தன்னுடைய ரோல் மாடல் சகாயம் ஐ.ஏ.எஸ்.தான்.’ என்று கூறி வருபவர். இப்படிப்பட்ட மாரிமுத்துவுக்கு,   உரிய விடுப்பு அனுமதி பெறாமல் ஈட்டிய விடுப்பில் சென்றதாகவும், தன்னுடைய பதவியின் முக்கியத்துவம் பற்றி கவலைப்படாமல் பணியில் நேர்மையும் பற்றும் இன்றி உள்ளதாகவும் குறிப்பாணை அனுப்பி தன்னிலை விளக்கம் கேட்டார், நெடுஞ்சாலை க(ம)ப பிரிவின் தென்காசி கோட்டப் பொறியாளர் சுந்தர்சிங்.  

‘தன்னிலை விளக்கம்தானே! தாராளமாக அளிக்கிறேன்!’ என்கிற ரீதியில், விரிவாக ஒரு கடிதம் அனுப்பினார் மாரிமுத்து.  ‘நான் ஈட்டிய விடுப்பு தொடர்ந்து 99 நாட்கள் எடுத்ததற்குக் காரணமே தென்காசி கோட்டப் பொறியாளர்தான் . வேறு வழியில்லாமல் (நெ) க (ம) ப தென்காசி கோட்டப் பொறியாளரும் நானும் பேசிய பேச்சை அப்படியே ‘ரிபீட்’ செய்கிறேன்.’ என்று கோட்டப் பொறியாளருக்கு எழுதி, அதன் நகல்களை முதன்மை இயக்குநர் (நெ) வரைக்கும் அனுப்பிவிட்டார். கிணற்றில் போட்ட கல்லாக மாரிமுத்து அளித்துள்ள தன்னிலை விளக்கத்தை மேலதிகாரிகள் கிடப்பில் போட்டுவிட்ட  நிலையில், அந்த உரையாடல் தற்போது அம்பலமாகி, நெடுஞ்சாலைத்துறையின் ஊழலை சந்தி சிரிக்க வைத்திருக்கிறது.  

 

 மாரிமுத்து
மாரிமுத்து

 

கோட்டப் பொறியாளர் மற்றும் மாரிமுத்து இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலில் குறிப்பிட்ட சில பகுதிகள் இதோ –  

கோட்டப் பொறியாளர் : உங்களை மாதிரி ஆட்களை எல்லாம் இந்த D.G ரெகுலர் பிரிவில் போட்டு எங்களுக்கு ஏன் தலைவலியை உருவாக்குகிறார் என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரியாதா? மேலே இருந்து கிழே வரை உள்ள அத்தனை கமிஷன் முறையும். 30 சதவீதம் வரை ஸ்பெஷல் பி.ஏ.க்கு கொடுத்த பிறகுதான் (நெ) க (ம) ப பிரிவில் ஒப்பந்தகாரர்கள் பணியே எடுக்க முடியும். எனவே, SE அல்லது CE யே நினைத்தாலும் 100 சதவீதம் தரத்தோடு பணியினை வாங்க முடியாது. எனவே, உங்களால் முடிந்தவரை பணியை வாங்கிக்கொள்ளுங்கள்.  

மாரிமுத்து:  பிரிவு அலுவலரான JE ஒப்பந்தப்படி ஒப்பந்தகாரர்களிடம் பணியை வாங்க முடியாது. எனவே செய்த பணியைவிட கூடுதலாக பணி செய்ததாக M.Book இல் நான் பதிவு செய்ய மாட்டேன். அதனால், ஒப்பந்தகாரர் பணிகள் இல்லாத அலுவலகப் பணியும், சாலைப் பணியாளர்களை வைத்து பராமரிக்கும் பணிகளையும் தந்தால்,  செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

கோட்டப் பொறியாளர் : அப்படியெல்லாம் செய்ய முடியாது. அப்படியே செய்ய அனுமதித்தாலும்.. அதிலும், SE அல்லது DE அலுவலகங்களுக்கு பொது பணம் (காமன்) தர வேண்டியிருக்கும். அதனை நீங்க சாலை பழுதுபார்க்கும் கணக்கில் பெறப்பட்ட பணத்திலிருந்தும், அவசர பழுது நீக்கும் தலைப்பிலிருந்தும் மற்றும் சாலை சீரமைப்பு கணக்கு தலைப்பு போன்ற அத்தனை வகை பணிகளிலும் நீங்க நான் சொல்லுகிற மாதிரி்தான், ங.இர்ர்ந்-இல் பதிவு செய்து தர வேண்டியது இருக்கும்.  

மாரிமுத்து : நான் நேர்மையாக எனது ஊதியத்திற்காக மட்டுமே வேலை செய்ய முடியாதா சார்? 

கோட்டப் பொறியாளர் : 1 வருடம் ஆகாமல் இந்த DG உங்களை மாற்றவும் மாட்டார். நீங்கள் பணியில் இருந்தால் வேறு பிரிவு பொறியாளருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கவும் முடியாது. எனவே, நீங்கள் குடும்ப சூழல் என தெரிவித்து 45 நாட்கள் ஈட்டிய விடுப்பு கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். அப்போதுதான், நான் உங்கள் இடத்துக்கு வேறு பொறியாளரைக் கேட்டு வாங்க முடியும். . அப்புறம் உங்களுக்கு உரிய இடத்தை DG யிடம் பேசி நீங்க வாங்கிட்டு போங்க.  

மாரிமுத்து : நான் அப்படியே செய்கிறேன்.  இருவரின் உரையாடலும் இப்படியே நீள்கிறது. மாரிமுத்து அளித்துள்ள தன்னிலை விளக்கக் கடிதத்தில், ‘குறிப்பாணையில் என் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், நான் பணியில் நேர்மையாக இல்லை என்ற குற்றச்சாட்டும் என் மீது உள்நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டுள்ளது.. அதனாலேயே, சில விபரங்களை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.’ என்று சுட்டிக்காட்டத் தவறவில்லை.  

ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் கொடியைப் பறக்கவிடவா சிறையில் அடைபட்டு,  ரத்தம் சிந்தி, உயிரைவிட்டு நம் முன்னோர்கள் சுதந்திரம் வாங்கித் தந்தார்கள்? அரசுப் பணியில் இருந்துகொண்டு சில துறைகளில் நேர்மையாகப் பணிபுரிவதென்பது மிகப்பெரிய சவாலாகத்தான் இருக்கிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
madurai thirumangalam nearest two wheeler car incident

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் திருமங்கலம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Attention Paytm Passtag users

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளைத் தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்திருந்தது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இதனையடுத்து பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் நாளை மறுநாளுக்குள் (15.03.2024) வேறு  வங்கிக்கு மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.