Skip to main content

நெடுஞ்சாலைத்துறையில் இயக்குநர் பணியிடத்துக்கு ஐ.ஏ.எஸ் -பட்டயப் பொறியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை...!

Published on 07/01/2020 | Edited on 07/01/2020

நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் பணியிடத்தை, கல்வித்துறையில் கொண்டு வந்ததைப் போல், ஐ.ஏ.எஸ். நிலைக்கு மாற்ற பட்டயப் பொறியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Highway Department-IAS

 



நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளர்/இளநிலைப் பொறியாளர் பணியிடம் 75% / 25% என்ற அடிப்படையில் பணிபுரிய வேண்டும். அதுபோல், உதவி கோட்ட பொறியாளர் பதவி உயர்வு,  3:1 என்ற அடிப்படையில் வழங்க வேண்டும்.  பதவி உயர்வு தகுதிக்கு இருவருக்கும் 5 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

தற்போது நெடுஞ்சாலைத்துறையில்,  இளநிலைப் பொறியாளர்கள்  சுமார் 275 பேர் பணியாற்றி வர வேண்டும்.  ஆனால்,  150-க்கும் குறைவாகத்தான் பணியாற்றி வருகிறார்கள்.  மேலும்,  உதவி கோட்ட பொறியாளர் பதவி உயர்வு பெறுவதற்கு இளநிலை பொறியாளர்களுக்கு மட்டும் பணி அனுபவம் ஐந்து வருடம் என்றிருந்தது,   பத்து வருடங்கள் என   விதி திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரே வேலையைச் செய்யக் கூடிய இளநிலை பொறியாளர்களுக்கும், உதவி பொறியாளர் களுக்கும் பதவி உயர்வில் ஏன் இந்த பாகுபாடு? எதிர்காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டிப்ளமோ பொறியாளர்கள் பணியிடங்களை ஒழிக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து எடுத்துவரக்கூடிய பரிந்துரை,  முதன்மை இயக்குநரால் செய்யப்பட்டு வருவதாகத்  தெரிகிறது.

முதன்மை இயக்குநர் பணியிடம்,  பட்ட பொறியாளர்கள் தகுதி நிலையில் உள்ள பணியிடமாக இருந்து வருகிறது.  எனவே 2010-ல் இருந்து,  தொடர்ந்து வரக்கூடிய நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர்கள்,  பட்டய பொறியாளர்களை பாதிக்கும் நடவடிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறார்கள்.

எனவே,  பட்டய பொறியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதன்மை இயக்குனர் பணியிடத்தை கல்வித்துறையில் கொண்டு வந்ததுபோல் ஐ.ஏ.எஸ். நிலைக்கு மாற்ற வேண்டும். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
madurai thirumangalam nearest two wheeler car incident

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் திருமங்கலம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Attention Paytm Passtag users

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளைத் தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்திருந்தது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இதனையடுத்து பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் நாளை மறுநாளுக்குள் (15.03.2024) வேறு  வங்கிக்கு மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.