உடல்நலம் குன்றிய மகனை பார்க்க விடுப்பு வழங்காததால் பணியை ராஜினாமா செய்யப்போவதாக பள்ளிக்கரணையை சேர்ந்த காவலர் பாரதி என்பவர் தன் முகநூலில் வீடியோவாக பதிவிட்டுள்ளது இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.
அந்த வீடியோவில் காவலர் பாரதி கூறியதாவது,
பையனுக்கு ஆப்பரேஷன் கண்டிப்பாக செல்லவேண்டும் என்று விடுப்பு வேண்டும் என இன்ஸ்பெக்டரிடம் முறையிட்டும் அதை ஏற்காமல் நான் பொய் சொல்வதாக கூறினார். நான் என் மீது நம்பிக்கை இல்லை என்றால் டாக்டரிடம் போன் செய்து தருகிறேன் பேசுங்கள் என்றேன். அதுவும் முடியாது என தெரிவித்துவிட்டார். உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன் என்று கூறினார்.
அதேநேரத்தில், மருத்துவமனையிலிருந்து அழைப்பு, உங்கள் பையன் ரொம்ப அழுகிறான், நீங்கள் இருந்தால் சரியாக இருக்கும் உடனடியாக வாருங்கள் என்று கூறினர். நான் உடனடியாக இதனை மடிப்பாக்கம் உதவி ஆணையாளரிடம் தெரிவித்து விடுப்பு கேட்கிறேன், அவரோ 2 நாட்கள் சென்று வருமாறு கூறினார். நான் 2 நாட்கள் போதாது.. ஒரு வாரம் பையனுடன் இருந்துவிட்டு வருகிறேன் என்று கூறினேன். ஆனால் அவரோ அவ்வளவு நாள் விடுப்பு தர முடியாது என்று மறுத்துவிட்டார். அவர் மறுத்ததும் துணை ஆணையாளரிடம் போய் அனுமதி கேட்க சென்றேன். அவரும் என் கஷ்டத்தை ஏற்க மறுத்துவிட்டார்.
இதன் பின், மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்ளவா? இல்லை வேலையை விடவா? என்று யோசித்து ஊருக்கு சென்று விட்டேன். பின்னர் 10 நாட்கள் கழித்து மீண்டும் பணிக்கு திரும்பினேன். ஆனால் அவர்கள் பணியை தொடரமுடியாது. உனக்கு விடுமுறை போடப்பட்டுள்ளது என என்னை நிறைய அழைய விட்டனர். சரி இவ்வளவு அழைந்தும், நிறைய கஷ்டப்பட்டப் பின்னரும் ஏன் இந்த வேலையில் இருக்க வேண்டும்? இவர்களிடம் எதற்காக இப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்து வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். வேலை செய்வதே குடும்பத்தினருக்காக தான். ஆனால் அவர்களுக்கு முடியாத சமயத்தில் உடனிருந்து பார்க்கக் கூட முடியவில்லை பின் எதற்கு இந்த வேலை? சொந்த ஊர் சென்று வேறு ஏதேனும் தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்துவிட்டேன் என அதில் அவர் உருக்கமாக கூறியுள்ளார்.
உடல்நலம் குன்றிய மகனை பார்க்க விடுப்பு வழங்காத உயர்அதிகாரிகள்: முகநூலில் காவலர் உருக்கம்!
சார்ந்த செய்திகள்
Next Story
தமிழக போலீசார் யாருடைய ஏஜென்ட்? - நீதிமன்றம் கேள்வி
மதுவிலக்கு கொள்கை பிரச்சாரம் மேற்கொள்ள மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி வேண்டும் என பாமக சார்பில் ராணிப்பேட்டை காவல்துறையில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறை இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட பாமக செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மாரத்தான் ஓடுவதற்கும் நடப்பதற்கும் காவல்துறை அனுமதி வழங்கும்போது மதுவுக்கு எதிரான பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? எனக் காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார். மேலும் ஆளும் கட்சியினருக்கு மட்டும்தான் காவல்துறை அனுமதி வழங்குகிறதா? எனவும் கேள்வி எழுப்பினார்.
யாருக்காக காவல்துறையினர் உள்ளனர். ஆளுங்கட்சியினருக்காகவா அல்லது பொது மக்களுக்காகவா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெயச்சந்திரன், வருமான வரித்துறை அமலாக்கத்துறை ஆகியவை சோதனைக்கு வந்தால் மத்திய அரசின் ஏஜென்ட்கள் எனக் குற்றம் சாட்டும் பொழுது தமிழக காவல்துறை யாருடைய ஏஜென்டாக செயல்படுகிறது என்றும் வினவினார்.
ராணிப்பேட்டையில் பாமகவின் மதுவிலக்கு கொள்கை பிரச்சார பேரணிக்கு அனுமதி மறுத்தது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்றால் டிஎஸ்பி நேரில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Next Story
'இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி' - சென்னை காவல்துறை எச்சரிக்கை
வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் பொது இடங்கள் மற்றும் கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் பட்டாசு விற்பனை தொடர்பான கட்டுப்பாடு விதிமுறைகளைச் சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 வரை என மொத்தமாக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த விதிமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும்; தீபாவளி பண்டிகையின் போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்; பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்; பட்டாசுகளால் விபத்து நேர்ந்தால் 100, 101, 108, 112 ஆகிய எண்களை உடனே அழைக்க வேண்டும்; சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கப்பட வேண்டும், வெடிக்கப்பட வேண்டும்; தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ/வெடிப்பதோ கூடாது; பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடுவதை பொதுமக்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்; பெரியவர்களின் பாதுகாப்பு இல்லாமல் குழந்தைகளிடம் தனியாக பட்டாசு வெடிகளை கொடுத்து வெடிக்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் தீபாவளியன்று சுமார் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.