கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை காரணமாக, இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டுவரப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கல்லூரி பருவத் தேர்வுகள், கோடை விடுமுறை முடிந்ததும் கல்லூரி திறக்கப்படும்போது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகளுக்கு கல்வியாண்டு தொடக்கத்தில் தேர்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் மாதம் கல்லூரிகள் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டுக்கான பருவ தேர்வுகள் ரத்து செய்யவில்லை, ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முதலில் தேர்வுகள் நடத்தப்பட்ட பிறகுதான் அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்கள் தொடங்கும் எனவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments