Skip to main content

தேர்தல் வாக்குறுதிப்படி இந்த ஆண்டு எத்தனை டாஸ்மாக் கடைகளை மூட உள்ளீர்கள்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Published on 05/07/2018 | Edited on 06/07/2018


தேர்தல் வாக்குறுதியின்படி இந்த ஆண்டு எத்தனை டாஸ்மாக் கடைகளை மூட உள்ளீர்கள்? மூடப்பட்ட கடைகளை மீண்டும் திறப்பதற்கு காட்டும் அக்கறையை இளைஞர்களை கெடுக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவதில் ஏன் காட்டவில்லை? என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

சென்னை, திருமுல்லைவாயலில் மதுபான கடைகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 பேரின் ஜாமீன் மனுக்கள் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை உள்ளது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வக்கீலைப் பார்த்து, தமிழகத்தில்தான் மது அருந்துவோர் அதிகம் உள்ளனர். ஒரு தலைமுறை ஏற்கனவே மதுவுக்கு அடிமையாகி வீணாகிவிட்டது.
 

 

 

இந்த தலைமுறையையாவது காப்பாற்ற வேண்டும். இது நீதிமன்றத்தின் கடமையாகும். இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அதிகம் அடிமையாகி வருகிறார்கள். மது அருந்துபவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பல குற்றங்கள் டாஸ்மாக் பார்களிலிருந்தே தொடங்குகின்றன. இந்த பார்களை ஏன் மூடக்கூடாது? இந்த பார்கள் உணவு பாதுகாப்பு சட்டப்படி உரிய அனுமதியுடன்தான் நடைபெறுகிறதா? அதிமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி கடந்த 2016ல் 500 டாஸ்மாக் கடைகளை மூடியது. கடந்த ஆண்டு 500 கடைகள் மூடப்பட்டன.

இந்த ஆண்டு எத்தனை கடைகளை மூட உள்ளீர்கள்?. மூடப்பட்ட கடைகளை மீண்டும் திறப்பதற்கு காட்டும் அக்கறையை இளைஞர்களை கெடுக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவதில் ஏன் காட்டவில்லை?. நடப்பாண்டில் 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அரசு கடைகளை மூட என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இந்த கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை (6ம் தேதி) பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 6ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.