High Court orders withdrawal of orderlies!

Advertisment

காவலர்பயிற்சிபெற்றவர்களைஆர்டர்லிகளாகநியமிப்பது குற்றம்எனத்தெரிவித்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றம், அவர்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான, வழக்கில் உயரதிகாரிகள், அவர்களின் கீழ்இருப்பவர்களைக்கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்க நேரிடும் என்றும், காவல்துறையினர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

Advertisment

உயரதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வாகனங்களிலேயே, கருப்புப்பிலிம்பயன்படுத்துவது, காவல்துறையினர் பெயர்களை அவரது வாகனங்களில் தவறாகப் பயன்படுத்துவது, வீடுகளில்ஆர்டர்லிஎன்ற பெயரில்காவல்துறையினரைதவறாகப் பயன்படுத்துவதுஉள்ளிட்டகுற்றச்சாட்டுகள் அண்மைநாட்களில் அதிகமாகஇருப்பதாகவும், இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாதுஎன்றும்கூறியிருக்கிறார் நீதிபதி.

மேலும், இவை சீரழிவுக்கும், அரசியல் அமைப்பு மீறலுக்கும் வழிவகுக்கும் என்றும் எச்சரித்திருந்தார். காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததில் எடுத்த நடவடிக்கை குறித்தும்,பிரச்னைக்குதீர்வு காணவும் அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆர்டர்லிமுறைப்படி கவனத்தில் கொள்ளுமாறு, தமிழக டி.ஜி.பி.க்குஉள்துறைச் செயலாளர் கடிதம்எழுதியிருப்பதாகவும், காவல்துறையினர் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சரும் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும், இது குறித்து தொடர்புடைய அதிகாரிகள் மீது தொடர்நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் விளக்கத்தில் திருப்திஅளிப்பதாககூறிய நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், காவல்துறையில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி முடித்து 45,000 ரூபாய் ஊதியம் பெறும் காவலர்களை,உயரதிகாரிகள்தனிப்பட்டகாரணங்களுக்காகப்பயன்படுத்துவது குற்றம் ஆகும். அதேபோல்,ஆர்டலிகளைப்பயன்படுத்தும்அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், காவல்துறையின் தற்போதைய அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகளின் வீடுகளில்உள்ளஆர்டர்லிகளைஉடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

வழக்கின்அடுத்தகட்டவிசாரணை வரும் ஜூலை 25- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.