Skip to main content

கிராம உதவியாளர்கள் நியமனத்தில் குளறுபடி - வட்டாட்சியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/06/2021 | Edited on 13/06/2021

 

High Court orders police to register case against staffs

 

கடந்த 2019 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி சங்கராபுரம் தாலுக்காவில் காலியாக இருந்த கிராம உதவியாளர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு சம்பந்தப்பட்ட இரண்டு வட்டாட்சியர்களும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். அந்த அறிவிப்பில்  சம்பந்தப்பட்ட கிராமத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் தூரத்திற்குள் வசிப்பவர்கள் மற்றும் அதற்கான கல்வித் தகுதி உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் அவர்களுக்கு நேர்காணல் நடத்தி தகுதி உள்ளவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்திருந்தனர். அதன்படி நிறைய பேர் வேலை கேட்டு விண்ணப்பித்தனர் (இதில் பணி நியமன பொறுப்பு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கு மட்டுமே உண்டு).

 

இதனடிப்படையில்  விண்ணப்பித்தவர்கள் அனைவரிடமும்  நேர்காணலும் நடத்தப்பட்டது. ஆனால் அரசு விதிமுறைப்படி  தகுதியுள்ளவர்களுக்கு  பணி நியமனம்  செய்யாமல் அப்போதிருந்த வட்டாட்சியர்கள் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக விஐபிக்களின் நெருக்கடிக்களுக்கும் பணத்திற்காகவும் தகுதி இல்லாதவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதனை கண்டித்து அப்போதே சங்கராபுரம் பகுதியில் இருந்த அப்போதைய ஆளும் கட்சியை சேர்ந்த அதிமுகவினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் தகுதியுள்ளவர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும் தகுதி இல்லாதவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டதை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள்.

 

உயர்அதிகாரிகளுக்கு புகாரும் அனுப்பப்பட்டது. இது சம்பந்தமான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் தற்போது கள்ளக்குறிச்சி வட்டாட்சியராக உள்ள பிரபாகரன் என்பவர் கிராம உதவியாளர்கள் பணிநியமனம் செய்தார்  (அப்போது கள்ளக்குறிச்சி சார் ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் பணி நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளார்) இதுசம்பந்தமான ஆவணங்கள் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து காணாமல் போய் விட்டது எனக்கூறி இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

 

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உரிய விசாரணை செய்து,  ஆவணங்கள் காணாமல் போனதற்கு காரணமான அப்போதைய வட்டாட்சியர் தயாளன், உதவியாளர் பாண்டியன், முதுநிலை ஆய்வாளர் தசரத ராஜன் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. அதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்ததில் ஆவணங்கள் காணாமல் போனதற்குக் காரணமானவர்கள் என தற்போது கல்வராயன் மலை முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருக்கும் தசரதராஜன், விழுப்புரம் தாலுக்கா ஆதிதிராவிடர் நல தாசில்தாராக இருக்கும் தயாளன், உளுந்தூர்பேட்டை  தேர்தல்  பிரிவு வட்டாட்சியராக உள்ள பாண்டியன் எனவும், காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும்  உத்தரவிட்டுள்ளது.

 

கள்ளக்குறிச்சி வட்டாட்சியராக இருந்த தயாளன், முதுநிலை ஆய்வாளர் தசரத ராஜன் மீதும் தற்போது வழக்கு பாய்ந்த்துள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும் தயாராகி வருவதாக கூறுகிறார்கள்.  வருவாய்த் துறையில் பணி செய்யும்  ஊழியர்கள், ஒரு வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த ஆவணம் களவாடப்பட்டுள்ள சம்பவம் அதற்கு காரணமானவர்கள் என காவல்துறையினரால் அடையாளம் காட்டப்பட்டுள்ள வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், முதுநிலை ஆய்வாளர் ஆகியோரது செயல்கள் பற்றி செய்திகள் வெளியானது கண்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

அரசு அலுவலகங்களில் உள்ள அரசு ஆவணங்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இப்படி ஆவணங்கள் களவாடப்பட்டதற்கு முக்கிய காரணம் கிராம உதவியாளர்கள் பணி நியமனங்கள் முறைகேடான முறையில் நடைபெற்றததான். இது சம்பந்தமான ஆவணங்கள் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைத்தால் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடும். அதற்கு பயந்து கொண்டே ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளது என்கிறார்கள் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் தாலுக்கா பகுதிகளில் வாழும் பொதுமக்கள். அப்போதைய அதிமுக ஆட்சியில் இதுவெல்லாம் சர்வசாதாரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.