Skip to main content

‘ஆம்பூரை எடுத்துவிட்டு திண்டுக்கல் ஸ்டார் பிரியாணி என்ற பெயரில்..’ -தடை விதித்தது உயர் நீதிமன்றம்!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

ஆம்பூர் ஸ்டார் பிரியாணி பெயரை பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 High Court imposes ban

 

பாரம்பரியம் மிக்க நவாப் குடும்பத்திற்கும் மற்றும் அவர்களது இல்லத் திருமண விழாக்களின்போதும் தலைமை சமையல் கலைஞராக பணியாற்றியவர் ஹசைன் ஃபேக்.  கடந்த 1890-ஆம் ஆண்டு ஆம்பூர் ஸ்டார் பிரியாணி என்ற பெயரில் பிரியாணிக்கான உணவகத்தை இவர் தொடங்கி நடத்தி வந்தார். நாளடைவில், தரம் மற்றும் சுவையின் காரணமாக ஆம்பூர் ஸ்டார் பிரியாணி  மக்களிடையே பிரபலமானது. சென்னை, பெங்களூரு, திருப்பதி மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் இதன் கிளைகள் இயங்கி வருகின்றன.

 

 High Court imposes ban


தற்போது ஆம்பூர் ஸ்டார் பிரியாணி உணவகங்களை ஹசைன் ஃபேக்கின் கொள்ளுபேரன் அனீஸ் அகமது நடத்தி வருகிறார். இந்நிலையில்,  ‘எங்களிடம் அனுமதி பெறாமல், ஆம்பூர் ஸ்டார் பிரியாணி என்ற பெயரிலுள்ள ஆம்பூரை மட்டும் எடுத்து விட்டு திண்டுக்கல் ஸ்டார் பிரியாணி என்ற பெயரில்  பிரியாணி உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இது,  எங்களுடைய உணவகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன், வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த விதிமீறலைத் தடுத்து, எங்கள் உணவகத்தின் பெயரைப் பயன்படுத்தி பிரியாணி விற்பனை செய்வதற்குத்  தடை விதிக்க வேண்டும்.’ எனக்கோரி ஆம்பூர் பிரியாணி உணவகங்களின் உரிமையாளர் அனீஸ் அகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல் விஜயன் சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார்.

இவ்வழக்கினை   விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், ஆம்பூர் 'ஸ்டார் பிரியாணி' பெயரை, திண்டுக்கல் ஸ்டார் பிரியாணி உணவகம் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.