Skip to main content

‘ஆம்பூரை எடுத்துவிட்டு திண்டுக்கல் ஸ்டார் பிரியாணி என்ற பெயரில்..’ -தடை விதித்தது உயர் நீதிமன்றம்!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

ஆம்பூர் ஸ்டார் பிரியாணி பெயரை பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 High Court imposes ban

 

பாரம்பரியம் மிக்க நவாப் குடும்பத்திற்கும் மற்றும் அவர்களது இல்லத் திருமண விழாக்களின்போதும் தலைமை சமையல் கலைஞராக பணியாற்றியவர் ஹசைன் ஃபேக்.  கடந்த 1890-ஆம் ஆண்டு ஆம்பூர் ஸ்டார் பிரியாணி என்ற பெயரில் பிரியாணிக்கான உணவகத்தை இவர் தொடங்கி நடத்தி வந்தார். நாளடைவில், தரம் மற்றும் சுவையின் காரணமாக ஆம்பூர் ஸ்டார் பிரியாணி  மக்களிடையே பிரபலமானது. சென்னை, பெங்களூரு, திருப்பதி மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் இதன் கிளைகள் இயங்கி வருகின்றன.

 

 High Court imposes ban


தற்போது ஆம்பூர் ஸ்டார் பிரியாணி உணவகங்களை ஹசைன் ஃபேக்கின் கொள்ளுபேரன் அனீஸ் அகமது நடத்தி வருகிறார். இந்நிலையில்,  ‘எங்களிடம் அனுமதி பெறாமல், ஆம்பூர் ஸ்டார் பிரியாணி என்ற பெயரிலுள்ள ஆம்பூரை மட்டும் எடுத்து விட்டு திண்டுக்கல் ஸ்டார் பிரியாணி என்ற பெயரில்  பிரியாணி உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இது,  எங்களுடைய உணவகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன், வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த விதிமீறலைத் தடுத்து, எங்கள் உணவகத்தின் பெயரைப் பயன்படுத்தி பிரியாணி விற்பனை செய்வதற்குத்  தடை விதிக்க வேண்டும்.’ எனக்கோரி ஆம்பூர் பிரியாணி உணவகங்களின் உரிமையாளர் அனீஸ் அகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல் விஜயன் சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார்.

இவ்வழக்கினை   விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், ஆம்பூர் 'ஸ்டார் பிரியாணி' பெயரை, திண்டுக்கல் ஸ்டார் பிரியாணி உணவகம் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.