Skip to main content

8 வழிச்சாலை: காவல்துறையால் நில உரிமையாளர்கள் தாக்கப்படுவதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

Published on 19/07/2018 | Edited on 19/07/2018
ChennaiSalem-8-way


8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் போது காவல்துறையால் நில உரிமையாளர்கள் தாக்கப்படுவதற்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரியும், திட்டத்திற்கான அரசாணையை எதிர்த்தும் வக்கீல்கள் சூரியபிரகாசம், வி.பாலு உள்ளிட்டோரும் தருமபுரியைச் சேர்ந்த நில உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், ‘தமிழகத்தில் எந்த திட்டமாக இருந்தாலும், அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த வழக்கிற்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை சார்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்’ என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், திருவனந்தபுரம் - நாகர்கோவில் சாலை திட்டம் நடந்தது எப்படி? தங்களுக்கு பாதகமாக திட்டம் வருவதாக நினைத்தால் எதிர்ப்பு வரத்தான் செய்யும். அதற்காக அதிகாரிகள் அத்துமீறக்கூடாது என்றனர்.

 

 

அப்போது, கிருஷ்ணமூர்த்தி சார்பில் வக்கீல் சக்திவேல் ஆஜராகி, நிலத்தை அளவீடு செய்ய செல்லும்போது நில உரிமையாளர்களை போலீசார் கடுமையாக தாக்குகிறார்கள் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், நாங்களும் தொலைக்காட்சிகளிலும், வலைத்தளங்களிலும் இந்த கொடுமையை பார்த்தோம். மக்களை அணுகுவதில் அதிகாரிகளுக்கு நிதானம் தேவை. வாகனங்கள் எவ்வளவு விரைவாக செல்ல வேண்டும் என்பதில் உள்ள அக்கறை விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதிலும் இருக்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்தும் போது போலீசாரும் அத்துமீறக் கூடாது. வயதானவர்கள் என்றும் பாராமல் அவர்களை கீழே தள்ளிவிடுவது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் கட்சிகளை வைக்கும் பேனர்களை அகற்றுவதில் இந்த வேகத்தைக் காட்டுங்கள் என்றனர்.

அப்போது, வக்கீல் வி.பாலு, “சென்னையிலிருந்து 3 மணி நேரத்திற்குள் சேலம் செல்வது சாத்தியம் அல்ல. சென்னை ஜூரோ பாயிண்டிலிருந்து தாம்பரம் செல்ல எத்தனை மணிநேரம் ஆகும் என்று அனைவருக்கும் தெரியும். திட்டத்தை தொடங்கும் இடத்திலிருந்து சென்னை ஜீரோ பாயிண்ட் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதேபோல்தான், சேலத்திற்குள் நுழைவதற்கும் நீண்ட நேரம் ஆகும். சாத்தியமில்லாத ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, நெடுஞ்சாலைத் துறையின் அறிவிப்பை அமல்படுத்துவது மாநில அரசின் கடமை. திட்டம் மத்திய அரசுடையது என்றாலும் செயல்படுத்துவது தமிழக அரசுதான். அதனால்தான் நிலம் அளவீடு தொடங்கப்பட்டது. போலீசார் கடினமாக செயல்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படும் என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த திட்டம் குறித்து மத்திய அரசு விரிவான மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து விசாரணை ஆகஸ்ட் 2ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

''எட்டு வழிச்சாலை... நிலத்தை கையகப்படுத்திதான் ஆக வேண்டும்''-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி! 

Published on 31/08/2022 | Edited on 31/08/2022

 

"Eight-lane highway... should be done by acquiring the land"- Minister AV Velu interviewed!

 

'எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை' என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

 

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ''எட்டு வழிச் சாலையை பொறுத்த அளவிற்கு முதல்வர் பிரச்சனைகளை அலசி பார்த்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள். நிலம் கொடுப்பவரிடம் சந்தை மதிப்பிற்கான பணத்தை கொடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். நாங்கள் இந்த திட்டத்திற்கு எதிரி கிடையாது. நாங்கள் ஏற்கனவே ஆட்சி நடத்தி இருக்கிறோம். பல சாலைகளை நாங்களே போட்டிருக்கிறோம், கையகப்படுத்தி இருக்கிறோம். இப்பொழுது ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.

 

சாலைகளை விரிவுபடுத்தித்தான் ஆக வேண்டும். நீங்கள் போகும் வண்டி, நான் போகும் வண்டி என நாளுக்குநாள் உற்பத்தி அதிகரித்துக் கொண்டே போகிறது. அப்பொழுது என்ன செய்ய முடியும் சாலையை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும். அப்பொழுது நிலத்தை கையகப்படுத்தி தான் ஆக வேண்டும். முதல்வர் வேண்டாம் என்று சொல்கிறார் சம்பந்தப்பட்ட மந்திரி சாலை போட வேண்டும் என்று சொல்கிறார் என்று எங்கேயாவது நிரூபியுங்கள்'' என்றார்.

 

 

Next Story

'உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணைக்கூட தர மாட்டோம்' - மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வேகமெடுக்கும் 8 வழிச்சாலை!  

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

 

கடந்த 2017 ஆம் ஆண்டு சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்திருந்தது மத்திய அரசு. 277 கிலோமீட்டர் தூரம், சுமார் 3 மணி நேரத்தில் சேலத்திலிருந்து சென்னை வந்தடையும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே சேலம் பகுதியில் விவசாயிகள் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். விவசாயிகளின்  எதிர்ப்பை மீறி பலரின் நிலங்களைச் சாலைக்காக கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டது. மேலும், 8 வழிச்சாலை திட்டம் என்ற பெயரில் மலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியதோடு நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. அந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

 

இந்நிலையில் மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வேகமெடுத்துள்ளது இந்த விவகாரம். சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்காக மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று (16.02.2021) சென்னை வந்தார். இதுதொடர்பாக நேற்று மாலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வரும் கலந்துகொண்டார். 'விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் 6 வழிச்சாலை போடப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.

 

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

 

இந்நிலையில் சேலம் - சென்னை 6 வழிச்சாலை அமையவுள்ள சேலம், வீரபாண்டி ஒன்றியத்தை ஒட்டியுள்ள பூலாவரி பகுதி மக்கள் 'உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணைக்கூட தர மாட்டோம். 8 வழிச் சாலையானாலும் சரி, 6 வழிச் சாலையானாலும் சரி, எதற்கும் எங்கள் நிலத்தை விட்டுத்தர மாட்டோம்' என்ற முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கலந்துகொண்ட விவசாயிகள் சிலர் பேசுகையில், 'முதலில் 8 வழிச்சாலை என்றார்கள், நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இன்று 6 வழிச்சாலை என்கிறார்கள், இது ஏமாற்று வேலை. 8 வழிச்சாலை போடத்தான் இவ்வாறு கூறி வருகிறார்கள். பயிர்க்கடன் தள்ளுபடி என்பதே சாலைக்காக நிலத்தை அபகரிக்கச் செய்யும் முயற்சி' என்றனர்.