Advertisment

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு 10,652 வழக்குகளில் தீர்வு! -தலைமை பதிவாளர் அறிவிப்பு!

high court chennai

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் 10 ஆயிரத்து 652 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisment

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, மார்ச் 26-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 732 வழக்குகளில், 341 வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளதாகவும், மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட 215 வழக்குகளில் 105 வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை பதிவாளர் சி.குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisment

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 12 ஆயிரத்து 109 வழக்குகளில், 10 ஆயிரத்து 206 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு தொடங்கிய நிலையில், சில வழக்குகள் நீதிமன்ற அறைகளில் விசாரிக்கப்பட்டாலும், ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் அனைத்து வழக்குகளும் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Announcement Registrar Chennai high court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe