Skip to main content

செட்டிநாடு குழுமத்தில் வருமான வரி சோதனை!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

hettinad group income tax raid

 

செட்டிநாடு குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

 

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை, காஞ்சிபுரம், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள செட்டிநாடு குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை இன்று (09/12/2020) காலை 08.00 மணி முதல் நடைபெற்று வருகிறது. சோதனையில் சுமார் 100- க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

செட்டிநாடு குழுமமானது சிமெண்ட் உற்பத்தி, மின் உற்பத்தி, போக்குவரத்து, கல்வி நிலையங்கள், மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 


 

சார்ந்த செய்திகள்