சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆலோசனை செய்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72- வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி ஆலோசனை செய்ததாக தகவல் கூறுகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவின் அம்மா பேரவை மாநில செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார்,உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவைத்தலைவர் மதுசூதன்ஆகியோர் பங்கேற்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதிமுக சார்பில் ஜனவரி 25- ஆம் தேதி தமிழகத்தில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி தென்சென்னையில் முதல்வர் பழனிசாமியும், காஞ்சிபுரத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொண்டு பேசுகின்றனர்.