Skip to main content

ஆம்புலன்சை வழிமறித்த யானைக் கூட்டம்... நடுக்காட்டில் குழந்தை பெற்ற இளம்பெண்! திக்... திக்.. நிமிடங்கள்!

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

The herd of elephants that led the ambulance ... The girl who gave birth to a child in the middle of the forest!

 

தேன்கனிக்கோட்டை அருகே, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை யானைக் கூட்டம் வழிமறித்ததால், அந்த வாகனத்திலேயே நிறைமாத கர்ப்பிணி குழந்தை பெற்ற திக்... திக்... சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள போலாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பசவராணி (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு மார்ச் 20ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. மலைக் கிராமமான அந்த ஊரில் யாரிடமும் கார், தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்தனர். சிறிது நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் வந்தது. பசவராணியை ஏற்றிக்கொண்டு உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். 

 

அய்யூர் வனத்துறை சோதனைச்சாவடிக்கு சில கிலோமீட்டர் தூரம் முன்பாக சென்று கொண்டிருந்தபோது, 12 யானைகள் கூட்டமாக சாலையின் குறுக்கே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து நின்று கொண்டிருந்தன. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர், வாகனத்தை நடுக்காட்டுக்குள் நிறுத்திவிட்டு, வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமாருக்கு தகவல் அளித்தார். 

 

The herd of elephants that led the ambulance ... The girl who gave birth to a child in the middle of the forest!

 

அவர், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசனுக்கு தகவல் சொன்னார். இதையடுத்து வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சாலையில் கூட்டமாக நின்று கொண்டிருந்த யானைகளை விரட்டியதில், அவை காட்டுக்குள் சென்று விட்டன. இதற்கிடையே, பிரசவ வலியால் அவதிப்பட்டு வந்த பசவராணிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. சம்பவ இடத்தில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். 


இதையடுத்து உனிசெட்டி ஆரம்ப சுகாதார நியைத்திற்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 


சினிமாவில் வருவதுபோல் திக்... திக்... சம்பவத்திற்கு இடையே நிறைமாத கர்ப்பிணி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Rage for daughter refusing to give up love and incident happened in krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காமாட்சி (33) என்ற மனைவியும், ஸ்பூர்த்தி எனும் 16 வயதில் மகளும் இருந்தார்கள். ஸ்பூர்த்தி, பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டை வெளியே சென்று ஸ்பூர்த்தி, இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் ஸ்பூர்த்தி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (16-03-24) இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தது ஸ்பூர்த்தி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஸ்பூர்த்தி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி ஆகியோர், மாணவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், மாணவியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் ஏரியில் வீசியுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி (36) ஆகிய 3 பேரையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால், பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.