எந்த ஊரிலும் ரசிகர்கள் பேனர்கள் வைக்கக்கூடாது என நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற காப்பான் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சூர்யா,
வாழ்க்கையில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் நேர்மையாக இருந்தால் நிச்சயம் பயன் கிடைக்கும். வேறு ஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் நான் நடித்தால் அது நிச்சயம் வெற்றி பெறும். ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் கதையை நான் எப்போதும் தவறு விடமாட்டேன். எந்த ஊர்களிலும் ரசிகர்கள் பேனர்கள் வைக்கக்கூடாது. பேனர்கள் வைப்பதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்தார்.