Skip to main content

உயிர் காக்க உதவுங்கள்... நீலகிரி மீட்புபணியில் நேர்ந்த விபத்தில் இளைஞர் குடல் சரிந்தது!

Published on 25/08/2019 | Edited on 26/08/2019

நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத  கனமழையால் ஏற்பட்ட மண் சரிவினால் உயிர், உறவு, வீடு, உடமைகளை இழந்து நிர்கதியாய் நிற்கிறார்கள் அப்பகுதி மக்கள். 

மலை மேல் கிராமங்களுக்கு போகும் வழிகளை காணவில்லை அதனால் உதவிகள் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. பல வீடுகள் சரிந்து கொட்டிய மண் நிறைந்து அகற்ற முடியாமல் தவிக்கிறார்கள். ஓங்கி உயர்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கிறது. மீட்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். அதனால் வெளியூர்களில் இருந்த இளைஞர்கள் நீலகிரி மாவட்டம் முழுவதும் வந்து தங்கி உதவிகளை செய்து வருகிறார்கள். 

 

 Help save lives ... Youth gut collapses in Nilgiris rescue

 

இந்த இளைஞர்களே உதவி செய்ய வருபவர்களுக்கு வழிகாட்டிகளாகவும் உள்ளனர். இந்தநிலையில்தான் பெறும் மண்சரிவில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒவேலி சைமுதீன் கடந்த 8 ந் தேதி மண் சரிவில் சிக்கி 11 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டார். அதேபோல மற்றொரு இளைஞர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவச் சென்ற இடத்தில் பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேபோலதான் என்றும் அன்புடன் இளைஞர்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிக்குழுவுடன் இணைந்து செயலாற்றிக் கொண்டிருந்த ரமேஷ்லால் என்ற இளைஞர் ஒரு மீட்பு பணியின் போது மரங்களை வெட்டி அகற்றும் பணியில் இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்த போது எதிர் திசையில் நின்று மற்றொரு இயந்திரம் இயக்கப்பட்டவருக்கு ரமேஷ்லால் நிற்பது தெரியவில்லை. வேகமாக இயங்கிய இயந்திரம் ரமேஷ்லாலின் வயிற்றில் அறுத்து குடல் சரிந்துவிட்டது. உடனே துணியை வைத்து குடலை உள்ளே வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். தனியார் மருத்துவமனைக்கு  கொண்டு போய் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்.

 

 Help save lives ... Youth gut collapses in Nilgiris rescue


உடனே நண்பர்கள் கேரளாவில் உள்ள டி.எம்.விம்ஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இன்று காலை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சுமார் ரூ 2 லட்சம் வரை செலவாகும் என்பதால் கையில் ஒரு பைசா இல்லாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். 
 

இது குறித்து அவரது நண்பர்கள் கூறும் போது.. 

நல்ல மக்கள் சேவகர். மக்களுக்கு பாதிப்பு என்றதும் உடனே களப்பணியில்இறங்கினார். தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் மக்களுக்கு உணவுக்கு கொடுத்துவிட்டு களப்பணியில் இறங்கினார். ஒவ்வொரு இளைஞரும் தங்கள் சேமிப்பை மக்களின் நிவாரணத்திற்காக செலவிட்டு கையில் பணமில்லாமல் நிற்கிறோம். ரமேஷ்லாலுக்கு இப்படி ஒரு விபத்து. அடுத்தடுத்து சோதனைகள். எப்படியும் நண்பர் ரமேசை காப்பாற்ற வேண்டும் என்றுதான் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்டோம். நல்ல உள்ளங்கள் நிச்சயம் உதவிகள் செய்வா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

 

 Help save lives ... Youth gut collapses in Nilgiris rescue

 

தமிழக, கேரளா அரசுகள் கூட மருத்துவ செலவை ஏற்றுக் கொண்டால் போதும் என்றனர் கண்ணீர் திரள. ஒரு நல்ல மக்கள் சேவகனை காப்பாற்ற உதவிகள் செய்ய மனமுள்ள நல்ல உள்ளங்கள்.. கீழே உள்ள எண்களில் தொடர்பு கொண்டு விபரம் அறிந்தே உதவலாம்.. ஆனந்த் - 9527119747, சிவா மாஸ்டர் - 6383748489, சாந்தகுமார் - 9585877853. இந்த எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம்..

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi's helicopter was tested

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.04.2024) நீலகிரி வந்திருந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.