Skip to main content

எதிர்பாராத கனமழை... மிதக்கும் குடிசைகள்!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

யாரும் எதிர்பார்த்திடாத அளவிற்குப் பெய்து வரும் கனமழையால் டெல்டா மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. மழையுடன் திடீரென வீசிய சூறைக்காற்றுக் குடிசை வீடுகளையும், புயலில் மிஞ்சியிருந்த மரங்களையும் நொருக்கிப் போட்டுவிட்டது.

 

இந்த ஆண்டு வழக்கத்தைத் தாண்டி அதிக மழை பெய்து வருகிறது, வட கிழக்கு பருவமழை தொடக்கத்தில் 'நிவர்' புயல், பிறகு 'புரெவி' புயலால் கனமழை முதல் மிக கனமழை பெய்ததால் டெல்டா மாவட்டங்களையே தண்ணீரில் மிதக்க வைத்தது. அந்த தண்ணீர் வடிவதற்குள் யாரும் எதிர்ப்பார்த்திடாத நிலையில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதியில் இருந்து மீண்டும் கனமழை கொட்டித் தீர்க்கிறது. ஏற்கனவே பெய்த மழையில் கலகலத்துப் போயிருந்தக் குடிசைகளும், மரங்களும் தற்போது பெய்து வரும் பெரும் மழையாலும், சூறாவளிக் காற்றாலும் தூக்கி வீசபட்டுள்ளன.

 

திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் நேற்று (12/01/2021) இரவு பெய்த கனமழையுடன் கூடிய சூறைக்காற்றும் வீசியதால், அந்த கிராமத்தில் உள்ள 50- க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளைப் புரட்டிப் போட்டுவிட்டன. மூன்று ஆடுகள் பலியாகியுள்ளன. மேலும் மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. 

 

"கஜா புயல் கூட ஓரிரு நாளில் மொத்தத்தையும் அழிச்சிட்டு போனிச்சி, ஒருவாரம் அழுதுபுறண்டோம், பிறகு எங்களுக்குள் தைரியத்தை உண்டாக்கிக் கொண்டு, அடுத்த கட்டத்திற்குப் போனோம். ஆனால் இந்த ஆண்டு வெறும் மழையாவே பெய்து நீரில் மிதக்க விட்டுடுச்சி ஒரு மாதமா இடைவிடாம பெய்யுது, குடிசை வீடுகளும், மரங்களின் வேர்களும் ஊரிப்போனதால் லேசான சூறாவளிக் காற்றுக்கே தாக்குப் பிடிக்காமச் சாய்ந்துவிட்டது, எங்க வயசுக்கு பொங்கல் வரைக்கும் பெய்யுற கனமழைய இந்த ஆண்டுதான் நாங்க பார்க்குறோம்" என்கிறார்கள் வடபாதிமங்கலம் மக்கள்.

 

இயற்கை, டெல்டா மக்களை வெயிலில் காய்த்து அழிக்கிறது, இல்லை என்றால் மழையாக பொழிந்து அழிக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.