Advertisment

தென்காசியில் கனமழை; குற்றால அருவியில் குளிக்கத்தடை

nn

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவு முதல் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

Advertisment

கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியிலும் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டும் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரதான அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. தற்பொழுது அங்கு கனமழை பெய்து வருவதாலும் பொங்கல் முடிந்து கடைசி விடுமுறை நாள் என்பதாலும் சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிய வாய்ப்பு இருப்பதால் அங்கு தற்காலிகமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

kutralam rain thenkasi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe