திருச்சியில் லால்குடி, புள்ளம்பாடி, கல்லகுடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர், தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர்,திருப்பனந்தாள்பகுதியில் மழை பெய்து வருகிறது. மேலும் மதுரையில் மேலூர், ஒத்தக்கடை, கீழவளவு, மேலவளவு, அழகர்கோயில். திருவாரூரில், நன்னிலம், சன்னாநல்லூர், பேரளம்,குடவாசல், கொரடாச்சேரி. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தற்போது மழை பொழிந்து வருகிறது.
பலத்த மழை காரணமாக திருவாரூர், திருச்சி, அரியலூர் ஆகிய மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் திருச்சி, திருவாரூர் அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.